செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

7 வருட காதலுக்கு நடுகல் வைத்த காதலி.. உயிரை விட்ட காதலன்..! உன்னை நினைத்து படம் போல சம்பவம்

Jun 27, 2022 09:48:43 PM

7 வருடம் உயிருக்கு உயிராக காதலித்த பெண், திருமணத்துக்கு முந்தைய நாள் வேறு ஒரு இளைஞருடன் சென்றுவிட்டதால் ஏமாற்றத்துக்குள்ளான காதலன் வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். திருமணம் தடை பட்டுவிடக்கூடாது என்று  திடீர் மணமகளான பெண் வாழ்க்கையை இழந்து தவிக்கும் சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.Tindivanam

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ந.புதூரை சேர்ந்தவர் குமரேசன். கட்டிட தொழிலாளியான இவர் பக்கத்துகிராமத்தை சேர்ந்த இளம் பெண்ணை கடந்த 7 வருடமாக காதலித்து வந்தார். அந்த பெண்ணின் குடும்பத்தின் வறுமை நிலை அறிந்து ஏராளமாக உதவிகள் செய்த குமரேசன், அந்த பெண்ணை ஜவுளிக்கடையில் வேலைக்கு சேர்த்து விட்டுள்ளார்.

அங்கு நாள் முழுவதும் நிற்பதால் கால் வலிப்பதாக அந்த பெண் வேதனை தெரிவித்ததால் அண்மையில் வேறொரு கடையில் வேலைக்கு சேர்த்து விட்டுள்ளார். இந்த நிலையில் 7 வருட காதலுக்கு மரியாதை செய்யும் விதமாக இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார் குமரேசன்.

23 ந்தேதி இருவருக்கும் திருமணம் நடக்க இருந்த நிலையில் 20ந் தேதி அந்தப் பெண் வேறொரு இளைஞருடன் வீட்டை விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆறுதல் தெரிவித்த குடும்பத்தினர், திருமணம் தடைபட்டு விடக்கூடாது என்று குமரேசனுக்கு, வேறு ஒரு பெண்ணை அதே நாளில் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்த நிலையில் 7 வருடமாக உயிருக்கு உயிராக காதலித்தவள் ஏமாற்றி சென்றதை மறக்க இயலாமல் மனம் நொந்து போன குமரேசன் வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதால் அந்த கிராமமே சோகத்தில் ஆழ்ந்தது. அந்த பெண்ணுக்காக தன் உயிரை மாய்த்துக் கொள்ளவில்லை என்றும் முள்ளாய் குத்தும் நினைவுகளை மறக்க இயலவில்லை என்றும் சோகத்துடன் குமரேசன் குறிப்பிட்டுள்ளார்.

குமரேசனின் அவசர புத்தியால் ஒரு பாவமும் அறியாமல், அவரை திருமணம் செய்த பெண்ணின் வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. திடீர் கணவனின் பொறுப்பற்ற அவசர முடிவால் என்ன செய்வதென்று தெரியாமல் அந்தபெண் தவித்து நிற்கிறார்.


Advertisement
திருச்செந்தூர் முருகன் கோயில் உண்டியலில் ரூ. 5.15 கோடி... 2 கிலோ தங்கம், 41 கிலோ வெள்ளி காணிக்கை
கரூர் அருகே சாலையில் சென்றுக் கொண்டிருந்தபோது தீப்பற்றி எரிந்த ஓலா எலக்ட்ரிக் பைக்
புதுக்கோட்டை அருகே சாலையோரம் நின்ற காரில் கிடந்த 5 பேரின் சடலங்கள்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல்
விழுப்புரத்தில் நகைக் கடையில் நூதன முறையில் திருடிவிட்டு தப்பிய 3 பெண்களை போலிசாரிடம் ஒப்படைப்பு
கரூரில் தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயம்
கள்ளக்குறிச்சி கெடிலம் ஆற்றில் மணல் அள்ளிச் சென்ற 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்
இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேசத்தவர் 6 பேர் கைதுவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேசத்தவர் 6 பேர் கைது
உளுந்தூர்ப்பேட்டையில் சுற்றுலா வேன் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்தில் 6 பேர் உயிரிழப்பு- 14 பேர் காயம்
மரக்காணம் அருகே மழை பெய்தபோது வேப்ப மரத்தடியில் ஒதுங்கிய விவசாயி மின்னல் தாக்கி உயிரிழப்பு
கணேசா.. கணேசா... போயிருப்பா காட்டுக்குள்ள கடை வச்சா எப்படி ? லட்டு பஞ்சாமிர்தம் லபக்ஸ்..! பக்தர்கள் கூச்சலிட்டும் பயனில்லை..!

Advertisement
Posted Sep 25, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கணேசா.. கணேசா... போயிருப்பா காட்டுக்குள்ள கடை வச்சா எப்படி ? லட்டு பஞ்சாமிர்தம் லபக்ஸ்..! பக்தர்கள் கூச்சலிட்டும் பயனில்லை..!

Posted Sep 24, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

டெல்டாவில் KGF நாகா பாய்..! இரும்புல்லாம் கரும்பு மாதிரி.. “டக்”குன்னு கட் செய்வார்களாம்.! கொள்ளைக்கருவி அமேசானில் ஆர்டர்..!

Posted Sep 24, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

100 வருஷம் வாழ்வதும் ஒரு வகையில் சாபம் தானோ..? மனைவியை கொன்ற பெரியவர்..! இந்த நிலை எதிரிக்கும் வரக்கூடாது

Posted Sep 23, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரவுடி சீசிங் ராஜா.... சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்..? ஆம்ஸ்ட்ராங் வழக்கில் NO என அறிவிப்பு

Posted Sep 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !


Advertisement