செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சவால் விட்ட சர்க்கஸ் கலைஞர்.. சாதித்த குமரி மண்ணின் மைந்தர்..!

Jun 26, 2022 09:41:28 PM

நாகர்கோவிலில் நடைபெற்ற ஜம்போ சர்க்கஸில் ஆப்பிரிக்கா கலைஞர் சவாலை ஏற்று களம் இறங்கிய நாகர்கோவில் இளைஞர் ஒருவர் 80 கிலோ எடையை ஒற்றை கையால் தலைக்கு மேல் தூக்கி சாகசம் செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கடந்த சில தினங்களாக ஜம்போ சர்க்கஸ் நடைபெற்று வருகிறது. இந்த சர்க்கஸில் பல்வேறு சர்க்கஸ் கலைஞர்கள். தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதில் ஒரு கலைஞரான ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் 80 கிலோ எடை கொண்ட பெரிய இரும்பு உருண்டையை ஒற்றை கைகளால் தூக்கி சாதனை செய்து வருகிறார்.

சம்பவத்தன்று இந்த சாகசம் செய்து கொண்டிருந்த அந்த ஆப்ரிக்க கலைஞர், தன் கையில் மைக்கை வைத்துக்கொண்டு, இந்த 80 கிலோ இரும்பு உருண்டையை உங்களில் யாராவது ஒருவர் தலைக்கு மேல் ஒற்றை கையால் தூக்க முடியுமா? என மைக்கில் சவால் விடுத்தார்.

எல்லோரும் தவித்து நிற்க, கூட்டத்திலிருந்து, குமரி மண்ணின் மைந்தரான கண்ணன் என்பவர் மேடைக்கு சென்று சவாலை எதிர்கொள்ள தயார் என்று நின்றார்.

வார்ம் அப் செய்த படி அங்கிருந்த 80 கிலோ எடை கொண்ட இரும்பு உருண்டையை ஒற்றை கையால் தனது தலைக்கு மேல் தூக்கி சாதனை படைத்தார்.

சவாலில் வென்ற கண்ணனை ஆப்பிரிக்க கலைஞர் தட்டிக்கொடுத்து பாராட்டினார். சர்க்கஸை காண வந்திருந்த பார்வையாளர்கள் அனைவரும் கண்ணனுக்கு கரகோஷம் எழுப்பி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

சர்க்கஸ் முடியும் நாளில் மீண்டும் இந்த இரும்புக் குண்டை தூக்கப்போவதாக கண்ணன் விருப்பம் தெரிவித்துள்ளார். சவாலை சாதித்துக்காட்டிய கண்ணனின் இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்படுகின்றது.

தமிழனின் வீரம் எந்நாட்டவருக்கும் சளைத்தது அல்ல என்பதற்கு இந்த சம்பவம் நிகழ்கால உதாரணம்.


Advertisement
அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி புகார்... அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு
ஆபரேசன் அகழி... புதுச்சேரியில் பதுங்கியிருந்த பிரபல ரௌடி பட்டறை சுரேஷ் கைது
கல்பாக்கத்தில் அதிவேகமாக சென்ற 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலி, 2 பேர் படுகாயகம்
கூவத்தை சீரமைக்க 'மாஸ்டர் பிளான்' வேண்டும் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !
கடந்த 3 ஆண்டுகளில் திமுக செய்தது என்ன ? - எஸ்.பி. வேலுமணி கேள்வி
எந்த புதிய அரசியல் கட்சி வந்தாலும் திமுகவை அசைக்க முடியாது - அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்
தமிழகத்திற்கு உரிய நிதியை மத்திய அரசு தரவில்லை - கனிமொழி
ரூ.2 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி - கள்ளநோட்டுகளைக் காட்டியும் வாகன சோதனை பேரிலும் மோசடி செய்த கும்பல்
இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Advertisement
Posted Sep 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி

Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்


Advertisement