செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பலாப்பழம் மற்றும் குளிர்பானம் காம்பினேசன்.. தொடரும் பலாப்பழ உயிரிழப்பு மர்மம்.!

Jun 22, 2022 10:50:10 AM

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பலாப்பழம் மற்றும்  குளிர்பானம் அருந்திய சிறுவன் உயிரிழந்த நிலையில் நேற்று அவனது தாயாரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு பரணி என்ற மனைவியும், இனியா என்ற மகள் மற்றும் பரணிதரன் என்ற மகனும் உள்ளனர்.

கடந்த 3 தினங்களுக்கு முன்பு தாய் பரணி மற்றும் அவரது மகன், மகள் ஆகிய மூவரும் வீட்டில் உணவு அருந்தி விட்டு உடனே பலாப்பழம் சாப்பிட்டு குளிர்பானம் குடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் சிறிது நேரத்தில் 3 பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை அடுத்து சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பரணிதரன் உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து வேல்முருகன் அளித்த புகாரின் பேரில் மருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மகனின் உடல் அடக்கத்திற்காக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த தாயை உறவினர்கள் அழைத்து சென்றுள்ளனர்.

தொடர்ந்து மீண்டும் தாய்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து உடனடியாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மகள் இனியாவும் மேல் சிகிச்சைக்காக இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் தாய் பரணி மருத்துவமனையில் உயிரிழந்தார். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மகள் இனியா சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையில் சிறுவன் பரணியின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே தங்களால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முடியும் என மருதூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கூறுகையில், பலாப்பழம் தொடர்ந்து கூல்டிரிங்ஸ் சாப்பிடுவதால் உயிர் இழப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் சிறுவனின் பிரேத பரிசோதனை, மற்றும் மருதூர் போலீசாரின் விசாரணையில் உண்மை நிலை தெரிய வரும் என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையில் குடும்ப பிரச்சனை காரணமாக கூல்டிரிங்ஸில் எலி பேஸ்ட் கலந்து மகன், மகளுக்கு கொடுத்து தாயும் குடித்ததாக உறவினர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

ஆகையால் போலீசாரின் தீவிர புலன் விசாரணைக்குப் பின்னரே பலாப்பழ உயிரிழப்பின் பின்னணி குறித்த விவரங்கள் தெரிய வரும்.


Advertisement
டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு.. போலீஸ் நிலையத்தை சூறையாடிய மக்கள்
வீலிங் வீடியோ வெளியிட்ட இளைஞரின் பைக் பறிமுதல்.. இன்ஸ்டா நேயர் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக விபரீதத்தில் சிக்கிய இளைஞர்
தலையை சிதைத்து இளைஞர் படுகொலை.. தி.மு.க பிரமுகர் கொலைக்கு பழிக்குப்பழியா..?
இந்தியா என்பது ஒரு நிர்வாக கட்டமைப்பு மட்டுமே "மாநிலங்களை தனித்தனியாக பார்க்காமல் ஒரே நாடாக கருத வேண்டும்" - ஆளுநர் ஆர்.என்.ரவி
ஊழல் வழக்கில் சிறை சென்றவர் தியாகியா..? செந்தில்பாலாஜி காவல் நிலையத்தில் எப்படி கையெழுத்திடுவார்..? - இ.பி.எஸ் கேள்வி
ஒரே நாளில் 3 சிறுவர்களைக் கடித்துக் குதறிய தெரு நாய்கள்
கோவையின் அடையாளமாகத் திகழ்ந்தவர் பத்மஸ்ரீ பாப்பம்மாள்: வானதி
கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல புதிய நடைமுறை
சுருளி அருவிக்கு அருகே நடைபெறும் சாரல் விழா 2024 - தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்..!!
செந்தில் பாலாஜி அன்று ஊழல்வாதி, இன்று தியாகியா..? : எச்.ராஜா கேள்வி

Advertisement
Posted Sep 29, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

தூக்குப்பா.. தூக்கிப் போடுங்க.. இப்படி ஒரு ஆபீசர் தான் வேணும்.. நடைபாதை நடக்குறதுக்கு தானே ?.. போலீசார் அதிரடி காட்டிய காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்டெய்னருக்குள் க்ரெட்டா கார் பணத்துடன் தப்பிய கொள்ளை கும்பல் கொக்கி கொள்ளையன் சுட்டுக் கொலை..! பட்டப்பகலில் பர பர சேசிங் காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஏ.டி.எம் கொள்ளையர்களுடன் சென்ற கண்டெய்னர்.. தீரன் பட பாணியில் தப்ப முயன்ற கும்பல்... போலீஸ் என்கவுன்டரில் ஒருவன் பலி, 5 பேர் கைது

Posted Sep 28, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

மழை நீர் மேலே.. தார்ச்சாலை என்ன ஒரு புத்திசாலி தனம்.. உத்தரவுக்கு கீழ்படிகிறார்களாம்..! தரமற்ற சாலைப் பணிக்கு மக்கள் எதிர்ப்பு

Posted Sep 27, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நான் ஆம்பளடா.. அடாவடி ஆட்டோ ஓட்டுனரை பிடித்து அடக்கிய அந்த இரு பெண்கள் ..! போக்குவரத்து ஊழியர்களுக்கு அடி உதை


Advertisement