செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

‘அவன் கவனிக்க மாட்டான்’.. 90 வயதிலும் பனை ஏறி பதநீர் இறக்கும் தாத்தா..! நம்பிக்கை மனிதரின் மறுபக்கம்..!

Jun 22, 2022 10:50:49 AM

பெற்ற மகன் கவனிக்காமல் கைவிட்டு மும்பை சென்று விட்ட நிலையில் நெல்லையை சேர்ந்த 90 வயது முதியவர் ஒருவர் , இந்த வயதிலும் பனைமரத்தில் ஏறி பதநீர் இறக்கி தனது மனைவியை காப்பாற்றி வருகின்றார். படிக்கவில்லையே என்று கண்ணீர் சிந்தும் நம்பிக்கை மனிதரின் மறுபக்கம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

வயதோ 90... கண்ணில் கண்ணாடி இல்லை... கூன் போட்டு நடந்தாலும்... எவரிடமும் கும்பிடு போட்டு பிழைக்கவில்லை..! மன தைரியத்துடன் கற்பக விரூட்சமான பனை மரத்தில் ஏறி பதநீர் இறக்கி உழைத்து வருகிறார்..!

நெல்லை அருகே முனைஞ்சிபட்டி அடுத்த காரியாண்டி கிராமத்தை சேர்ந்தவர் துரைப்பாண்டி. 12 வயதில் இவரது உறவினர் ஒருவர் கையில் பாளை அருவாளை கொடுத்து பனை மரம் ஏற்றிவிட, கடந்த 78 வருடத்தில் மும்பை, கேரளா என மாநிலம் விட்டு மாநிலம் சென்று பனைத்தொழில் செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி உள்ளார்

இந்த வயதிலும் தன்னம்பிக்கையுடன் பனை மரத்தில் ஏறி பக்குவமாக பாளையை அரிவாளால் சீவி, பத நீர் இறக்கி உழைக்கும் பெரியவர் துரைப்பாண்டிக்கு, தன்நம்பிக்கை இருந்தாலும் அவரது மகன் கைவிட்டுச் சென்று விட்டதால் மனதில் உள்ள வலி அவரது கண்களில் கண்ணீராய் வெளிப்படுகிறது.

இந்த பதனீரை விற்று அதில் கிடைக்கும் காசில் தான் தானும் மனைவியும் அரிசி வாங்கி சாப்பிடுவதாக தெரிவிக்கும் பெரியவர் துரைப்பாண்டிக்கு, மனதில் வலி இருந்தாலும், இன்னமும் கையில் அரிவாள் பிடிக்க தெம்பும், மன உறுதியும் அதிகமாகவே இருக்கிறது.

பெரியவர் துரைப்பாண்டியை பார்க்கும் போது வயதானவர் கஷ்டபடுகிறாரே ? என்று தோன்றினாலும், உழைத்து பழகியவர்கள் எளிதில் சோர்ந்து போவதில்லை என்பதற்கு சாட்சியாய் காட்சி அளிக்கும் அவருக்கு, தன்னால் பள்ளிப்படிப்பை தொடர இயலவில்லையே என்ற வேதனை மனதுக்குள் உள்ளது..!

இந்த நம்பிக்கை பெரியவரின் மனவலியை உணர்ந்த மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு, அவருக்கும் அவரது மனைவிக்கும், அண்மையில் முதியோர் உதவித் தொகை கிடைப்பதற்கான உத்தரவை அதிகாரிகளை அனுப்பி வீடுதேடிச்சென்று வழங்கி உள்ளார்.

 

திருமணம் முடிந்து சில ஆண்டுகளிலேயே மனைவியை பிரிந்து செல்லும் இளைஞர்களும், தாய் தகப்பனை தவிக்க விட்டுச்செல்லும் பிள்ளைகளும் துரைப்பாண்டி போன்ற பெரியவர்களை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டியது ஒன்றுதான், குடும்பத்தில் ஆயிரம் மனவேதனைகள் இருந்தாலும் அவற்றை மறந்து தன்னை நம்பி வந்தவர்களை காலம் முழுவதும் காத்து , கவனித்துக் கொள்வதே அந்த ஆணுக்கும், ஆண்மைக்கும் அழகு ..!


Advertisement
மஹாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு எள், பிண்டம் வைத்து தர்ப்பணம்
ஈரோட்டில் மதுபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி வந்து லாரியின் மீது மோதி விபத்து
தமிழ்நாட்டில் இயல்பை விட கூடுதலாக 18 சதவீதம் தென்மேற்குப் பருவமழை பெய்ததாக தகவல்
திரைப்பட ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் சம்பள பாக்கி விவகாரம்... காவல்நிலையத்தில் வைத்து பேமண்ட் வழங்கப்பட்டது
ஈஷா யோகா மையம் வழக்கு விசாரணை... 4 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் -காவல்துறை அதிகாரிகள்
பண்ருட்டியில் இரவில் தனியாக செல்வோரிடம் செல்போன் பறித்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட இருவர் கைது
மதுரை அருகே தைலம் டப்பாவை விழுங்கிய குழந்தை... லாவகமாக டப்பாவை வெளியே எடுத்த மருத்துவக் குழுவினர்
கோவையில் திமுக கனிமொழி எம்.பி. பி.ஏ.வின் தம்பி என்று கூறி மதுபோதையில் போலீசாருடன் இளைஞர் வாக்குவாதம்
அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்து விற்ற அக்கா,தங்கை.. கைது செய்த போலீஸ்
நகை வாங்குவது போல நடித்து 70 கிராம் கம்மல் திருடிய பெண்

Advertisement
Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ஜாலி கொள்ளையன் பராக் மயக்க ஸ்பிரே அடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு..! 150 சிசிடிவி காமிரா மூலம் போலீஸ் ஆக் ஷன்

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வாழ வைக்கும் சென்னையில் இப்படியா ? பசிக்கொடுமை... வேகாத மீனைத் தின்று.. புலம்பெயர் தொழிலாளி பட்டினிச் சாவு..! இறந்த பின் நீண்ட உதவும் கரங்கள்

Posted Oct 01, 2024 in சென்னை,Big Stories,

நடிகர் திலகம் சிவாஜி காலத்தை வென்ற நடிப்புச் சுவடுகள்

Posted Oct 01, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நீங்க நம்பலேன்னாலும் இது தாங்க நெசம் தனியாக ஓடிய பைக்..! ஷாக் காட்சிகளின் பின்னணி

Posted Oct 01, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

பா.ஜ.க கொடி கட்டிய காரில் சென்ற பெண்ணை மறித்து அடித்து கடத்திய கும்பல்..! கிளைமேக்ஸில் காத்திருந்த டுவிஸ்ட்..


Advertisement