செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

பொதுக்குழுவை தள்ளி வைக்கவேண்டும்... இல்லை... பொதுக்குழு நிச்சயம் நடக்கும்.... பரபரப்புக்கு பஞ்சம் இல்லை..

Jun 20, 2022 05:34:58 PM

அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை வலுத்துவரும் நிலையில், ஓபிஎஸ் தரப்பிலும், இபிஎஸ் தரப்பிலும் பரபரப்பான காட்சிகள் அரங்கேறி வருகின்றன.

அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை வலுத்துவரும் நிலையில், இன்றும், 7 வது நாளாக ஓபிஎஸ் தரப்பும், இபிஎஸ் தரப்பும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டன.

பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை விடுத்துள்ள கடிதத்தை வைத்திலிங்கம் வெளியிட்டார். இபிஎஸ் தரப்பிலிருந்து சாதகமான பதில் வராவிட்டால் நீதிமன்றத்தையும் ,தேர்தல் ஆணையத்தையும் நாட முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

மேலும், வானகரத்தில் அதிமுக பொதுக்குழு நடந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

 

இதனிடையே, அதிமுக பொதுக்குழு நடைபெறும் சென்னை வானகரம், ஸ்ரீவாரு மண்டபத்தில் இ.பி.எஸ் ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.ஏ.செங்கோட்டையன், கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர் மற்றும் கே பி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

திட்டமிட்டப்படி வருகிற 23 ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு நடைபெறும் என்று கே.பி.முனுசாமி பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

இந்நிலையில், கட்சி சட்ட விதிகளில் மாற்றம் செய்ய பொதுக்குழுவிற்கே முழு அதிகாரம் உள்ளது என்று அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் கட்சி அலுவலகத்தில் தெரிவித்தார்.

அதிமுக பொதுக்குழுவிற்கு சிறப்பு அழைப்பாளர்களை அழைப்பது ஒரு மரபு தான் என்றும், கட்சி விதிகளின் படி சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டியது கட்டாயம் இல்லை என்றும் இபிஎஸ் ஆதரவாளரான வழக்கறிஞர் பாபு முருகவேல் தெரிவித்துள்ளார். 

அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டுமென கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தை ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் சார்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி தொடர்ந்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டுமென்ற சூரியமூர்த்தி என்பவரின் மனு மீதான விசாரணையில் கடிதம் தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், கூட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி பாலகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நாளை மறுநாள் பதில் அளிக்க சென்னை 23ஆவது உதவி உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement
ஒரே நாளில் 3 சிறுவர்களைக் கடித்துக் குதறிய தெரு நாய்கள்
கோவையின் அடையாளமாகத் திகழ்ந்தவர் பத்மஸ்ரீ பாப்பம்மாள்: வானதி
கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல புதிய நடைமுறை
சுருளி அருவிக்கு அருகே நடைபெறும் சாரல் விழா 2024 - தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்..!!
செந்தில் பாலாஜி அன்று ஊழல்வாதி, இன்று தியாகியா..? : எச்.ராஜா கேள்வி
திருப்பதி லட்டு விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க நடிகர் ரஜினிகாந்த் மறுப்பு
பைக் மீது கார் மோதி விபத்து.. கல்லூரி மாணவன் படுகாயம்
ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயற்சி.. துறைமுகத்தில் பதுங்கி இருந்த வடமாநில கொள்ளையன் கைது
பத்மஸ்ரீ விருது பெற்ற 108 வயது பாப்பம்மாள் பாட்டி உடல்நலக் குறைவால் காலமானார்..!
அரசு பேருந்தில் மது பாட்டில்கள் கடத்தல்.. சோதனையில் வசமாக சிக்கிய அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்

Advertisement
Posted Sep 28, 2024 in Big Stories,

தூக்குப்பா.. தூக்கிப் போடுங்க.. இப்படி ஒரு ஆபீசர் தான் வேணும்.. நடைபாதை நடக்குறதுக்கு தானே ?.. போலீசார் அதிரடி காட்டிய காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்டெய்னருக்குள் க்ரெட்டா கார் பணத்துடன் தப்பிய கொள்ளை கும்பல் கொக்கி கொள்ளையன் சுட்டுக் கொலை..! பட்டப்பகலில் பர பர சேசிங் காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஏ.டி.எம் கொள்ளையர்களுடன் சென்ற கண்டெய்னர்.. தீரன் பட பாணியில் தப்ப முயன்ற கும்பல்... போலீஸ் என்கவுன்டரில் ஒருவன் பலி, 5 பேர் கைது

Posted Sep 28, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

மழை நீர் மேலே.. தார்ச்சாலை என்ன ஒரு புத்திசாலி தனம்.. உத்தரவுக்கு கீழ்படிகிறார்களாம்..! தரமற்ற சாலைப் பணிக்கு மக்கள் எதிர்ப்பு

Posted Sep 27, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நான் ஆம்பளடா.. அடாவடி ஆட்டோ ஓட்டுனரை பிடித்து அடக்கிய அந்த இரு பெண்கள் ..! போக்குவரத்து ஊழியர்களுக்கு அடி உதை


Advertisement