செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

ஒற்றைத் தலைமை விவகாரத்தில் தொடர் குளறுபடி : ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ். ஆதரவாளர்களுடன் தொடர் பேச்சுவார்த்தை..!

Jun 19, 2022 08:39:05 AM

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்த கருத்துகள் அதிகரித்து வரும் நிலையில், கட்சி நிர்வாகிகளுடன் ஈ.பி.எஸ். ஓ.பி.எஸ். தொடர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

அதிமுகவில் ஒற்றை தலைமையை மீண்டும் கொண்டு வர வேண்டுமென்ற முழக்கம் அதிகரித்துள்ள நிலையில், சென்னையில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் அவரவர் வீடுகளில் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டனர்.

அதிமுகவில் உள்ள 75 மாவட்ட செயலாளர்களில் 64 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

முன்னாள் அமைச்சர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விஸ்வநாதன், கே.பி அன்பழகன், சி.வி சண்முகம், தங்கமணி, விஜய பாஸ்கர், காமராஜ், ஆர்.பி உதயகுமார் உள்ளிட்டோருடன் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நள்ளிரவு வரை ஆலோசனை மேற்கொண்டார்.

மேலும் பெரும்பாலான மாவட்ட செயலாளர்களும், கட்சியின் நிர்வாகிகளும் நேரில் சென்று ஆலோசனையில் பங்கேற்றனர்.

மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் ஆதரவுடன் தனது பலத்தை எடப்பாடி பழனிசாமி நிரூபித்து வரும் நிலையில், சட்டவிதிகளை கையில் எடுத்துள்ள ஓ.பன்னீர் செல்வம், அதனை கொண்டு ஒற்றைத் தலைமைக்கு தொடர் எதிர்ப்பை காட்டி வருகிறார்.

முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்துடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

வரும் 23ஆம் தேதி அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் குறித்து இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். தரப்பினர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்சின் கட்சி மற்றும் அமைச்சர் பதவி குறித்து பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டுள்ள அவரது தரப்பினர், கட்சியில் அவரை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.


Advertisement
கண்டெய்னருக்குள் க்ரெட்டா கார் பணத்துடன் தப்பிய கொள்ளை கும்பல் கொக்கி கொள்ளையன் சுட்டுக் கொலை..! பட்டப்பகலில் பர பர சேசிங் காட்சிகள்
என்கவுன்ட்டர் மரணங்கள் குறித்து விசாரிக்க வேண்டும்... தொடக்கம் முதல் முடிவு வரை சட்டப்படியே நடைபெற வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
ராமநாதபுரம் அருகே 70 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தை இடிக்க நீதிபதிகள் உத்தரவு
நெல்லையில் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.4,000 லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளர் கைது
நாகப்பட்டினத்தில் உரிய உரிமம் இன்றி சுகாதாரமற்ற முறையில் இயங்கிய பேக்கரிக்கு பூட்டு
கடலூர் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் 800க்கும் மேற்பட்ட பணியாளர்கள்
திருச்சியில் மின்வாரிய அதிகாரிகள் லஞ்சவாதிகள் என அய்யாக்கண்ணு விமர்சனம்
ஏ.டி.எம் கொள்ளையர்களுடன் சென்ற கண்டெய்னர்.. தீரன் பட பாணியில் தப்ப முயன்ற கும்பல்... போலீஸ் என்கவுன்டரில் ஒருவன் பலி, 5 பேர் கைது
தமிழ்நாடு மின்வாரியத்துக்கு மின்மாற்றிகள் வாங்கியதில் 400 கோடி ரூபாய் ஊழல்... தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி
தாறுமாறாக ஓடிய கண்டெய்னர் - லாரி ஓட்டுநர் என்கவுன்டர்... நாமக்கல்லில் சிக்கியது ஹரியானா மாநில கொள்ளை கும்பல்

Advertisement
Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்டெய்னருக்குள் க்ரெட்டா கார் பணத்துடன் தப்பிய கொள்ளை கும்பல் கொக்கி கொள்ளையன் சுட்டுக் கொலை..! பட்டப்பகலில் பர பர சேசிங் காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஏ.டி.எம் கொள்ளையர்களுடன் சென்ற கண்டெய்னர்.. தீரன் பட பாணியில் தப்ப முயன்ற கும்பல்... போலீஸ் என்கவுன்டரில் ஒருவன் பலி, 5 பேர் கைது

Posted Sep 27, 2024 in சென்னை,Big Stories,

மழை நீர் மேலே.. தார்ச்சாலை என்ன ஒரு புத்திசாலி தனம்.. உத்தரவுக்கு கீழ்படிகிறார்களாம்..! தரமற்ற சாலைப் பணிக்கு மக்கள் எதிர்ப்பு

Posted Sep 27, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நான் ஆம்பளடா.. அடாவடி ஆட்டோ ஓட்டுனரை பிடித்து அடக்கிய அந்த இரு பெண்கள் ..! போக்குவரத்து ஊழியர்களுக்கு அடி உதை

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மசாஜ் சென்டரில் ரெய்டு... சிலாப்பில் பதுங்கிய பெண்கள் ஒரு பெண் மட்டும் குதித்தது ஏன்..?...ரெய்டு காட்சிகளை வெளியிட்ட போலீஸ்


Advertisement