செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

எலியை அடிக்க விரட்டிய பெண்ணுக்கு, மகனின் முன்னால் நிகழ்ந்த சோகம்.. மாரடைப்பால் பலியான சிசிடிவி காட்சி..!

Jun 18, 2022 07:43:48 PM

பம்மல் அருகே வீட்டுக்குள் புகுந்த எலியை அடிப்பதற்காக கையில் கம்புடன் துரத்தி சென்ற பெண் மங்கி விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் சிசிடிவி காட்சி வெளியாகி சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பம்மல் அடுத்த பொழிச்சலூர் பாபு தெருவை சேர்ந்தவர் செந்தில் லோடு வேன் ஓட்டுனராக உள்ளார். இவரது மனைவி லட்சுமி இந்த தம்பதியருக்கு 12 வயதில் மகன் உள்ளான்சம்பவத்தன்று செந்தில் வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் லட்சுமி வீட்டில் வேலை பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது வீட்டு வாசல் வலியாக எலி ஒன்று வீட்டுக்குள் நுழைவதை கண்ட லட்சுமி அதனை அடிப்பதற்காக கையில் கம்பை எடுத்துக் கொண்டு துரத்தினார். எலியை கம்பால் அடித்தாலும் அந்த எலி அவரிடம் இருந்து தப்பிச்சென்று விட்டது.

எலியை துரத்தி வந்த வேகத்தில் சுவறில் சாய்ந்தபடி நின்ற அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் அப்படியே மயங்கி கீழே விழுந்தார்

இதனை கண்ட அவரது மகன் என்ன செய்வதென்று தெரியாமல் ஓடிச்சென்று அக்கம்பக்கத்தினரை அழைத்து வந்தான்

இதனையடுத்து லட்சுமியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் , உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் அவரை மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த சங்கர்நகர் போலீசார் லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரனை நடத்தி வருகின்றனர், 36 வயதான லட்சுமி உடல் பருமனாக காணப்பட்டதாலும், முறையான உடல் பரிசோதனைகள் செய்து கொள்ளாததாலும் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் பிணகூறாய்வுக்கு பின்னர் அவரது உரிழப்புக்காண உண்மை காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

35 வயதை தாண்டிய ஆண்களும் பெண்களும் தங்கள் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும் நடை பயிற்சி, எளிய உடல் பயிற்சிகள், உணவுக்கட்டுப்பாடு ஆகியவை மாரடைப்பை தடுக்கும் என்று மருத்துவர்கள் அறிவுவுறுத்துகின்றனர்.

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பதை உணர்ந்து ஒவ்வொருவரும் முறையான உணவு கட்டுப்பாடுகளுடன் தங்கள் உடலை முறையாக கவனித்துக் கொள்ள வேண்டியது அவசியம்..!


Advertisement
செங்கல்பட்டில் சாதிச் சான்றிதழுக்காக அலைக்கழிக்கப்படுவதால் ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்
சிவகங்கையில் கைது செய்யப்பட்டவரின் காலை உடைத்ததாக புகார் - எஸ்.ஐ பணியிட மாற்றம்
ஈரோட்டில் தடகள வீராங்கனையை பின்தொடர்ந்து சென்று செல்போனை பறித்த 3 பேர் கைது
திருச்சியில் சிறுவன் மீது புல்லட் பைக்கை ஏற்றிய சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன்
திருவாரூரில் தம்பியின் இறுதிச்சடங்கில் அக்காள் உயிரிழப்பு 6 பேர் காயம்
கடலூரில் போலி மருத்துவ சான்றிதழ்கள் வழங்கிய வழக்கில் இந்திய சித்த மருத்துவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கைது
அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் டெக்னீஷியன்களை நியமிக்க உத்தரவு: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு
பாதுகாப்பு கருதி மழைக்கு முன்னதாக பக்கிங்காம் கால்வாயில் கட்டப்பட்ட தடுப்பணை ஷட்டர்கள் உடைப்பு
திருநெல்வேலியில் நீர்நிலையில் கட்டடம் கட்டி நிதியை வீணடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு
அரசுப் பெண்கள் பள்ளி மாணவிகள் வளைகாப்பு ரீல்ஸ்... வகுப்பு ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம்

Advertisement
Posted Sep 23, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரவுடி சீசிங் ராஜா.... சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்..? ஆம்ஸ்ட்ராங் வழக்கில் NO என அறிவிப்பு

Posted Sep 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி


Advertisement