செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

நடிகர் விஜய் அலுவலகத்தில் வாயில் புரோட்டாவுடன் ஊழியர் சடலம் கண்டெடுப்பு..!

Jun 17, 2022 06:14:16 PM

சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய்யின் அ.இ.த.வி.ம.இ அலுவலக வளாகத்தில் ஊழியர் ஒருவர் வாயில் புரோட்டாவுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் நடிகர் விஜய்யின்அ.இ.த.வி.ம.இ அலுவலகம் அமைந்துள்ளது. எளிதில் எவரும் உள்ளே ஏறி குதித்து புகுந்து விட இயலாத வகையில்10 அடி உயர கருங்கல் சுற்று சுவரில் பீங்கான் பதிக்கப்பட்டுள்ளது.

பெரிய இரும்பு கேட்டுகளுடன் அமைக்கப்பட்டுள்ள அந்த அலுவலகத்தில் உட்பகுதிகளை புதுமைபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இங்கு பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பெயிண்டரான பிரபாகரன்என்பவர் கடந்த ஒரு மாத காலமாக பெயிண்ட் அடிக்கும் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார்.

கடந்த சனிக்கிழமையன்று சம்பளத்தை பெற்று கொண்டு தன்னுடைய குடும்பத்தினரை காணச் சென்ற பிரபாகரன் சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் குடிபோதையில் நடிகர் விஜய்யின் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

அங்கிருந்த மேஸ்திரியிடம் தனக்கு பசிப்பதாகவும், புரோட்டா வாங்க 100 ரூபாய் தரும் படி கேட்டு பெற்று கொண்டு ஓட்டலுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மறுநாள் காலையில் அலுவலக வளாகத்தின் சுவறை ஒட்டிய உள்பகுதியில் கையிலும் வாயிலும் பரோட்டாவுடன் பிரபாகரன் இறந்து கிடந்ததை பார்த்து சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த கானத்தூர் போலீசார் பிரபாகரனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடிபோதையில் இருந்த பிரபாகரன் பரோட்டா சாப்பிட்டதில் உணவுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்றும், உடற்கூறு ஆய்வின் அறிக்கை வந்த பிறகே இறப்பிற்கான முழுமையான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.


Advertisement
பிரபல சென்னை ரவுடி CD மணி சேலத்தில் கைது - துப்பாக்கி முனையில் கைது செய்த தனிப்படை போலீஸ்
கெட்டுப் போன பப்ஸ் விற்பனை செய்த புகார் - சேலம் பத்மாலயா திரையரங்கின் கேண்டீனுக்கு சீல்
சட்டவிரோத மின்வேலியில் சிக்கி 15 வயது சிறுவன் உள்பட 3 பேர் பலி - போலீசார் விசாரணை
தரக்குறைவாகப் பேசியதால் தாக்குதல்.. பெட்டிக்கடைக்காரரை வெட்டிக் கொலை செய்த 3 பேர் கைது
குப்பைக் கிடங்கில் குப்பையோடு குப்பையாகக் கிடந்த வைரத் தோடு - கண்டுபிடித்துக் கொடுத்த தூய்மைப் பணியாளர்கள்..!!
முழுநேர அரசியல்வாதி என இங்கு யாரும் இல்லை - கமல்ஹாசன்
போலியாக பட்டா உருவாக்கி அரசு நிலம் ஆக்கிரமிப்பு.. அ.தி.மு.க பிரமுகர், அவரது மனைவி மீது வழக்குப்பதிவு
தடுப்பணை பலமாக இல்லையென்றால் கட்டியவர்கள் சிறைக்கு செல்வார்கள் - துரைமுருகன்
துப்பாக்கி முனையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் கடத்தல் - துரத்திப்பிடித்த எஸ்.ஐ.
இனி காவிரி நீரை மட்டுமே நம்ப வேண்டியதில்லை.. பண்ணைக் குட்டைகள் மூலம் குறுவை சாகுபடி செய்த முன்னாள் அமைச்சர்

Advertisement
Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி

Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 21, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு


Advertisement