செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வைகாசி விசாகம்.! முருகன் திருத்தலங்களில் கோலாகலம்.!

Jun 12, 2022 05:47:43 PM

வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி முருகன் கோவில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் அபிஷேகம் செய்தும், நேர்த்திக்கடன் செலுத்தியும் வழிபட்டு வருகின்றனர்.

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு நடைபெறும் திருவிழாவில் அதிகாலை 3 மணி முதல் இடைவிடாமல் பாலாபிஷேகம் செய்தும் பால்காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, இளநீர் காவடி எடுத்தும் பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

முருகனின் அவதார தினமான நாளாக கருதப்படும் இன்றைய தினம் வழிபட்டால் ஆண்டு முழுவதும் பலன் கிடைக்கும் என்பது ஐதீகமாக கருதப்படுவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஆறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் 3 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

 

நான்காம் படை வீடான கும்பகோணம் அருகே உள்ள சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. 

திருத்தணியில் உள்ள ஐந்தாம் படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விஸ்வரூப தீபாராதனையும், உதய மார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது.

வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு சென்னை வடபழனி முருகன் கோவிலில் பக்தர்கள் பால் குடம் ஏந்தி, அலகு குத்தி நேர்த்திக்கடனை செலுத்தினர்.

கோயிலுக்கு வந்த பக்தர்களில் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்த மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக பெருவிழாவையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement