நெல்லையில் 72வயதான முதியவருக்கு எய்ட்ஸ் இருப்பதாக தவறாக ரத்த பரிசோதனை அறிக்கை அளித்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை கோட்டூர் பகுதியை சேர்ந்த அக்பர் அலி என்பவர் கால்வீக்கம் காரணமாக சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்ட போது எச்ஐவி தொற்று இருப்பதாக கூறியுள்ளது. இதனை அடுத்து அவர் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்று ரத்த பரிசோதனை செய்த தில் எச்ஐவி தொற்று இல்லை என்பது தெரிய வந்தது.