செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வீட்டில் அயர்ந்து தூங்கிய 16 வயது சிறுமி.. கழுத்தில் தாலியால் மிரண்ட பெற்றோர்..! ஆட்டோ காதலால் பாய்ந்தது போக்சோ..!

Jun 02, 2022 06:48:02 AM

சென்னை திருமங்கலத்தில் கழுத்தில் தாலியுடன் வீட்டில் தூங்கிய 16 வயது சிறுமி மாயமான நிலையில் கடத்திச்சென்ற ஆட்டோ ஓட்டுனரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர், கடந்த 27-ம் தேதி திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில் பள்ளி ஒன்றில் படித்து வந்த தனது 16 வயது மகளை காணவில்லை என்றும் எனது மகளை கண்டுபிடித்து தருமாறும் புகாரில் கூறியிருந்தார். மேலும், தனது மகளுடன் சமூக வலைதளம் மூலம் பழகிய நபர் குறித்த தகவலையும் சிறுமியின் பெற்றோர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அதில் 2 மாதத்திற்கு முன்பே சிறுமி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது கழுத்தில் தாலி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் சிறுமியிடம் அதுகுறித்து கேட்டுள்ளனர்.

அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய தனது காதலன் குறித்து சிறுமி கூறியதாகவும் அண்ணாநகர் பகுதியில் ஒரு கோயிலில் வைத்து தனது காதலன் தாலி கட்டியதாக அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இந்த தகவல் வெளியில் தெரிந்தால் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் நற்பெயர் கெட்டுவிடும் என நினைத்து தாலியை அகற்றிவிட்டு சிறுமியை வீட்டிலேயே பாதுகாப்புடன் வைத்து இருந்துள்ளனர்.

இந்த நிலையில் சிறுமி தனது காதலனை தொடர்பு கொண்டு வீட்டில் எச்சரித்து, மிரட்டி வைத்துள்ள தகவலை கூறியதை அடுத்து சிறுமியின் இன்ஸ்டாக்ராம் காதலன் நேரில் வந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இங்கிருந்து கடத்திச் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.

இதையடுத்தது சிறுமியின் இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் அவரது காதலனை கண்டுபிடித்து மேல்மருவத்தூர் பகுதிக்கு சென்ற திருமங்கலம் மகளிர் போலீசார் அங்கு ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுமியை மீட்டு அவரது காதலன் 19 வயதான மிளவு அழகன் என்பவரை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

சிறுமியை கடத்திச் சென்ற இளைஞரிடம் விசாரணை நடத்தியதில் மேல்மருவத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான மிளவுஅழகன் கடந்த இரண்டு வருடமாக இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமியுடன் பழகி வந்துள்ளான் . சிறுமியை வீட்டில் இருந்து கடத்திச் சென்று மேல்மருவத்தூரில் உள்ள ஒரு வீட்டில் சிறுமியை தங்க வைத்து குடித்தனம் நடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது.

சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த திருமங்கலம் மகளிர் போலீசார் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மிளவு அழகனை புழல் சிறைசாலையில் அடைத்தனர்.

படிக்கின்ற வயதில் தங்கள் பிள்ளைகளின் கைகளில் ஸ்மார்ட் போன் கொடுக்கும் பெற்றோர் , பெண் குழந்தைகளை கவனிக்க தவறினால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சான்று..!

 


Advertisement
வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி டிஸ்சார்ஜ்
செங்கல்பட்டில் சாதிச் சான்றிதழுக்காக அலைக்கழிக்கப்படுவதால் ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்
சிவகங்கையில் கைது செய்யப்பட்டவரின் காலை உடைத்ததாக புகார் - எஸ்.ஐ பணியிட மாற்றம்
ஈரோட்டில் தடகள வீராங்கனையை பின்தொடர்ந்து சென்று செல்போனை பறித்த 3 பேர் கைது
திருச்சியில் சிறுவன் மீது புல்லட் பைக்கை ஏற்றிய சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன்
திருவாரூரில் தம்பியின் இறுதிச்சடங்கில் அக்காள் உயிரிழப்பு 6 பேர் காயம்
கடலூரில் போலி மருத்துவ சான்றிதழ்கள் வழங்கிய வழக்கில் இந்திய சித்த மருத்துவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கைது
அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் டெக்னீஷியன்களை நியமிக்க உத்தரவு: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு
பாதுகாப்பு கருதி மழைக்கு முன்னதாக பக்கிங்காம் கால்வாயில் கட்டப்பட்ட தடுப்பணை ஷட்டர்கள் உடைப்பு
திருநெல்வேலியில் நீர்நிலையில் கட்டடம் கட்டி நிதியை வீணடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு

Advertisement
Posted Sep 23, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரவுடி சீசிங் ராஜா.... சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்..? ஆம்ஸ்ட்ராங் வழக்கில் NO என அறிவிப்பு

Posted Sep 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி


Advertisement