செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அடேய் அப்ரண்டிஸ் டாக்டர், பெண் வயிற்றுக்குள்ள இதெல்லாமாடா வைத்து தைப்பீங்க...? அலட்சியத்தால் 7 மாதமாக அவதி..!

Jun 01, 2022 09:50:51 AM

காட்டுமன்னார் கோவிலில் ஏ.கே.செந்தில்குமார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்றில் துணி,நூல், இரும்புத்துண்டு மற்றும் ஊசி உள்ளிட்டவற்றை வைத்து தைத்துவிட்டதாக, 7 மாதமாக வலியால் அவதிக்குள்ளான அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மாதர் சூடாமணி கிராமத்தை சேர்ந்த 36 வயது பெண் கலைச்செல்வி. இவருக்கு திருமணமாகி கணவர் பிரிந்து சென்ற நிலையில்
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கர்ப்பப்பை கோளாறு சம்பந்தமாக சிதம்பரம் சாலையில் காட்டுமன்னார் கோவிலில் இயங்கும் ஏ.கே.செந்தில் குமார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவரை பரிசோதித்த மருத்துவர் செந்தில் குமார் கர்ப்பப் பையில் நீர் கட்டி இருப்பதாகவும் அதை அகற்ற வேண்டும் எனவும் கூறி உள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் கலைச்செல்விக்கு அடிக்கடி வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சில நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்ற போது மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனே அங்கு உள்ள தனியார் மருத்துவமனையில் கலைச்செல்வி அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் அவரின் வயிற்று பகுதியில் ஸ்கேன் செய்து பார்த்தபோது அந்தப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சைக்கு பயன் படுத்தப்படும் துணி, நூல், இரும்பு துண்டு மற்றும் ஊசி ஆகியவை உள்ளே வைத்து தைக்கப்பட்டு இருப்பதாக ஸ்கேன் அறிக்கையில் தெரிவந்ததால் 7 மாதமாக வலியால் துடித்த கலைச்செல்வி
அதிர்ச்சி அடைந்தார்.

தனக்கு அலட்சியத்துடனும் கவனக்குறைவாகவும் அறுவை சிகிச்சை செய்த காட்டுமன்னார்கோவில் ஏ.கே.செந்தில்குமார் மருத்துவமனையில் முறையிட்ட போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகின்றது.

அதனைத்தொடர்ந்து கலைச்செல்வி காட்டுமன்னார்கோவில் காவல்நிலையத்தில் ஏ.கே. செந்தில்குமார் மருந்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது உறவினர்களுடன் சென்று புகார் அளித்தார். இதன் அடிப்படையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

 


Advertisement
பா.ஜ.க கொடி கட்டிய காரில் சென்ற பெண்ணை மறித்து அடித்து கடத்திய கும்பல்..! கிளைமேக்ஸில் காத்திருந்த டுவிஸ்ட்..
சிவகாசியில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி.. திண்டுக்கல் அணியை வீழ்த்தி தமிழக காவல்துறை அணி வெற்றி
மதுரையில் தந்தையிடம் தகராறில் ஈடுபட்ட மகனை தடுக்க சென்ற பெயிண்டர் பலி கழுத்தை வெட்டி முகத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர் கைது..
திருப்பூரில் தொடர்ந்து கைது செய்யப்படும் வங்க தேசத்தினர்..
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை புரட்டிப்போட்ட 'ஹெலன்' சூறாவளி.. வெள்ள நீர் புகுந்த கராஜில் நிறுத்தப்பட்டிருந்த மின்சார கார் தீப்பற்றி எரிந்தது
விருத்தாசலம் அரசு மருத்துவமனையை சேதப்படுத்திய வழக்கு - 12 பேர் கைது
வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் குடிபோதையில் நுழைந்த இளைஞர்.. காவலரை தாக்கியதாக கைது..
சேலம் உருக்காலையில் மத்திய எஃகுத்துறை அமைச்சர் குமாரசாமி ஆய்வு..
தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை உடனே தடுப்பது சாத்தியமற்றது - மாநகராட்சி
சீரான மின்சாரம் வழங்காததைக் கண்டித்துஅ.தி.மு.க வினர் போராட்டம்.. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையில் திரளானோர் பங்கேற்பு..

Advertisement
Posted Sep 30, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

பா.ஜ.க கொடி கட்டிய காரில் சென்ற பெண்ணை மறித்து அடித்து கடத்திய கும்பல்..! கிளைமேக்ஸில் காத்திருந்த டுவிஸ்ட்..

Posted Sep 30, 2024 in வீடியோ,Big Stories,

இது தான் பைக்கா..? போலீசாரே...நியாயமா... ? திருடு போன வண்டியின் மீதி..? வாகன ஓட்டி அதிர்ச்சி..

Posted Sep 29, 2024 in வீடியோ,Big Stories,

My v3 ads பணத்திற்காக கணவன் - மனைவி கொலை.. சடலத்தோடு காரில் 2 நாள் ...!

Posted Sep 29, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

தூக்குப்பா.. தூக்கிப் போடுங்க.. இப்படி ஒரு ஆபீசர் தான் வேணும்.. நடைபாதை நடக்குறதுக்கு தானே ?.. போலீசார் அதிரடி காட்டிய காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்டெய்னருக்குள் க்ரெட்டா கார் பணத்துடன் தப்பிய கொள்ளை கும்பல் கொக்கி கொள்ளையன் சுட்டுக் கொலை..! பட்டப்பகலில் பர பர சேசிங் காட்சிகள்


Advertisement