செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

8 வது பிளாட்பாரத்தில் ஏழரையான எக்ஸ்லேட்டர்.. ஏறிய இடத்தில் இறக்கி விட்டது.!

May 29, 2022 06:24:00 PM

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இயங்காமல் நின்ற எக்ஸ்கிலேட்டர் வழியாக ஒருவர் மேலே ஏற முயல திடீரென அந்த எக்ஸ்கிலேட்டர் கீழ் நோக்கி இயங்க ஆரம்பித்ததால் ஏறிய நபர் நீண்ட நேரமாக ஒரே இடத்தில் ஏறிக் கொண்டிருந்த வினோதம் அரங்கேறியது.

சென்னை எழும்பூர் ரெயில் நிலையங்களில் அதிக அளவில் லக்கேட்ஜ்களை எடுத்துச் செல்லும் பயணிகள் எளிதாக பிளாட்பாரங்களை கடந்து செல்வதற்கு வசதியாக 1 வது நடைமேடை நுழைவாயில் தொடங்கி 10 வது நடை மேடை வரை மேலே ஏறுவதற்கும், கீழே இறங்குவதற்கும் எக்ஸ்கிலேட்டர் என்று சொல்லக்கூடிய நகரும் மின் ஏணிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இதில் 8 வது நடை மேடையில் பயணிகள் கீழ் நோக்கி இறங்குவதற்கு வசதியாக அமைக்கப்படுள்ள நகரும் மின் ஏணி, ஞாயிற்றுக் கிழமை காலை 6 மணி 20 நிமிடம் வரை இயங்காமல் பழுதானது போல நின்றது. இதனால் பயணிகள் அந்த மின் ஏணியை படிக்கட்டுக்கள் போல ஏறி இறங்க பயன்படுத்தி வந்தனர் .

8 வது பிளாட்பாரத்தில் நின்று இருந்த மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் உறவினர்களை வழியனுப்ப வந்தவர்கள் இயங்காத நகரும் மின் ஏணி வழியாக மேலே ஏறிச் சென்றனர். இதனை பார்த்த வேட்டி கட்டிய ஒருவரும் கையில் ஹெல்மெட்டுடன் அதில் ஏறி ஒவ்வொரு படியாக மேல் நோக்கி நடக்க தொடங்கினார், அவரது போதாத காலம் சிறிது நேரத்திலேயே அந்த மின் ஏணி கீழ் நோக்கி நகர ஆரம்பித்தது.

வேட்டியார் மேல் நோக்கி அடியெடுத்து வைக்க, மின் ஏணி கீழ் நோக்கி நகர ஒன்றுக்கொன்று சளைச்சதில்ல என்பது போல இருந்தது. நிதானமாக ஏறிக் கொண்டிருந்த அவரோ டிரட்மில்லில் நடப்பது போல ஒரே இடத்தில் நடந்து கொண்டிருந்தார்.

இருந்தாலும் நம்பிக்கையை கைவிடாமல் அவரும் மேலே ஏறிக் கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் ஆர்ப்பரித்து வரும் வெள்ளத்தில் எதிர் நீச்சல் போட்ட எறும்பின் கதையானது அவரது மேல் ஏறும் படலம்..!

நீண்ட நேரமாக ஏறியும் ஒரு அடி கூட மேலே செல்ல இயலாத நிலை ஏற்பட்டது

இதற்கிடையே மேலே இருந்து ஒருவர் அந்த படிக்கட்டில் அமர்ந்த படி கீழ் நோக்கி வர, வேட்டி கட்டிய நபர் தனது முயற்சியை கைவிட்டு அப்படியே நின்று விட ,
அடுத்த சில நொடிகளில் புறமுதுகு காட்டியபடி கீழ் நோக்கி இழுத்து வரப்பட்டார்.

இங்க ஒன்னும் சரியில்லை என்று அங்கலாயித்த படியே நகரும் மின் ஏணியில் இருந்து இறங்கிய அவர், தலையை சுற்றி மூக்கை தொடுவது போல சுற்றிச் சென்று சாய்தளத்தின் வழியாக மேல் ஏறி ரெயில் நிலைய பிளாட்பாரத்தை கடந்து சென்றார்.

ரெயில் நிலையங்களில் பயணிகள் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள நகரும் மின் ஏணிகள் அனைத்தும், பயணிகளின் வருகைக்கு ஏற்ப தானாக இயங்கும் வகையில் சென்சாருடன் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு


Advertisement
அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்து விற்ற அக்கா,தங்கை.. கைது செய்த போலீஸ்
நகை வாங்குவது போல நடித்து 70 கிராம் கம்மல் திருடிய பெண்
கணவரை கொன்றவர் குடும்பத்தை பழி தீர்க்கச் சென்ற பெண்.. காவலர் என்று கூறி கூலிப்படையுடன் வீடு புகுந்து கொலை முயற்சி
மதுபான பாட்டில்களுக்கு பில் வழங்கும் சோதனை முயற்சி.. முதற்கட்டமாக 7 மதுபான கடைகளில் சோதனைப் பணி
அண்டை மாநிலங்களில் தாராளமாக மது கிடைக்கும் போது தமிழகத்தில் எப்படி மது விலக்கு கொண்டு வர முடியும்..? - அமைச்சர் ரகுபதி கேள்வி
தம்பியை குத்திக் கொன்ற அண்ணன்.. நிலம் யாருக்குச் சொந்தம் என்பதில் ஏற்பட்ட தகராறில் நடந்த விபரீதம்
நாட்டுத் துப்பாக்கியால் சிறுத்தை சுட்டுக் கொலை.. பா.ம.க பிரமுகர் உட்பட 3 பேரை கைது செய்த வனத்துறை
பெண்ணுக்கு எலி காய்ச்சல் உறுதி.. நோய் தடுப்பு மருந்துகளை வழங்கி வரும் மருத்துவ குழுவினர்
தேங்காய் பறிக்க ஆள் தட்டுப்பாடு இருப்பதால் ரிமோட் மூலம் இயங்கும் தேங்காய் பறிக்கும் இயந்திரம் வடிவமைப்பு
விவசாயிகள் மனிதர்கள் இல்லையா? - நீதிபதிகள் கேள்வி

Advertisement
Posted Oct 01, 2024 in சென்னை,Big Stories,

நடிகர் திலகம் சிவாஜி காலத்தை வென்ற நடிப்புச் சுவடுகள்

Posted Oct 01, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நீங்க நம்பலேன்னாலும் இது தாங்க நெசம் தனியாக ஓடிய பைக்..! ஷாக் காட்சிகளின் பின்னணி

Posted Oct 01, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

பா.ஜ.க கொடி கட்டிய காரில் சென்ற பெண்ணை மறித்து அடித்து கடத்திய கும்பல்..! கிளைமேக்ஸில் காத்திருந்த டுவிஸ்ட்..

Posted Sep 30, 2024 in வீடியோ,Big Stories,

இது தான் பைக்கா..? போலீசாரே...நியாயமா... ? திருடு போன வண்டியின் மீதி..? வாகன ஓட்டி அதிர்ச்சி..

Posted Sep 29, 2024 in வீடியோ,Big Stories,

My v3 ads பணத்திற்காக கணவன் - மனைவி கொலை.. சடலத்தோடு காரில் 2 நாள் ...!


Advertisement