செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வேட்டைக்கு போன சாமி கிணற்றில் சடலமானதால் கோவில் கொடை விழா நின்றது..!

May 29, 2022 08:06:07 AM

தூத்துக்குடி மாவட்டம் தெய்வசெயல் புரம்  அருகே கருப்பசாமி கோவில் கொடை விழாவில் வேட்டைக்கு செல்வதாக கூறிவிட்டுச்சென்ற சாமியாடி மாயமான நிலையில் கிணற்றில் தவறி விழுந்து பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல்புரம் அடுத்த எல்லை நாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள கருப்பசாமி கோவில் கொடை விழா நடைபெற்றது. இந்த கோவிலில் லாரிவைத்து தொழில் செய்து வரும் சென்னையை சேர்ந்த 55 வயதான முருகன் என்பவர் எட்டு நாட்கள் விரதம் இருந்து கருப்பசாமிக்கு ஆடினார்

26 ந்தேதி அன்று இரவு 1.30 மணி அளவில் சாமக்கொடையில் ஆவேசமாக சாமியாடிய முருகன் , ஒரு கையில் வேல் கம்பு, மறுகையில் தீப்பந்தம் ஏந்தி வேட்டைக்கு சென்றார்.

கோவிலில் ஒற்றை கொட்டு முழங்க எல்லை நாயக்கன் பட்டியில் இருந்து தெய்வசெயல் சுற்றி அரை மணி நேரத்தில் கோவிலுக்கு திரும்பும் சாமியாடி... 2 மணி நேரத்திற்கு மேலாகியும் திரும்பி வரவில்லை மாயமானார்.

இதனால் சென்னையில் இருந்து கோவில் கொடை விழாவிற்க்கு வந்திருந்த சாமியாடி முருகனின் மனைவி மகள்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஊரும் பதறி போனது. 300 க்கும் மேற்பட்டவர்கள் கையில் டார்ச்லைட்டு மற்றும் செல்போன் லைட்டுடன் சாமிவேட்டைக்கு சென்ற பாதையில் தேடத்தொடங்கினர்.

வழியில் வயல்காட்டுபகுதியில் உள்ள தரைமட்டகிணற்று நீரில் சாமியாடிக்கு அணிவித்த மாலைகள் மிதந்தன. இதையடுத்து உள்ளூர் இளைஞர் ஒருவர் கிணற்றுக்குள் குதித்து பார்த்த போது நீருக்கு அடியில் சாமியாடி முருகன் மூழ்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

உடனடியாக அவரை மீட்ட இளைஞர்கள் காவல்துறை வாகனத்தில் ஏற்றிச்சென்று சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

காவல்துறையினரின் விசாரணையில் வேட்டைக்கு சென்ற சாமியாடி முருகன் வயல்காட்டில் இருந்த தரைமட்ட கிணற்றை கவனிக்காமல் உள்ளே தவறி விழுந்தது தெரியவந்தது. இதனால் கருப்பசாமி கோவில் கொடை விழா பாதியிலேயே நின்று போனதோடு ஊரே சோகத்தில் மூழ்கியது.


Advertisement
அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்து விற்ற அக்கா,தங்கை.. கைது செய்த போலீஸ்
நகை வாங்குவது போல நடித்து 70 கிராம் கம்மல் திருடிய பெண்
கணவரை கொன்றவர் குடும்பத்தை பழி தீர்க்கச் சென்ற பெண்.. காவலர் என்று கூறி கூலிப்படையுடன் வீடு புகுந்து கொலை முயற்சி
மதுபான பாட்டில்களுக்கு பில் வழங்கும் சோதனை முயற்சி.. முதற்கட்டமாக 7 மதுபான கடைகளில் சோதனைப் பணி
அண்டை மாநிலங்களில் தாராளமாக மது கிடைக்கும் போது தமிழகத்தில் எப்படி மது விலக்கு கொண்டு வர முடியும்..? - அமைச்சர் ரகுபதி கேள்வி
தம்பியை குத்திக் கொன்ற அண்ணன்.. நிலம் யாருக்குச் சொந்தம் என்பதில் ஏற்பட்ட தகராறில் நடந்த விபரீதம்
நாட்டுத் துப்பாக்கியால் சிறுத்தை சுட்டுக் கொலை.. பா.ம.க பிரமுகர் உட்பட 3 பேரை கைது செய்த வனத்துறை
பெண்ணுக்கு எலி காய்ச்சல் உறுதி.. நோய் தடுப்பு மருந்துகளை வழங்கி வரும் மருத்துவ குழுவினர்
தேங்காய் பறிக்க ஆள் தட்டுப்பாடு இருப்பதால் ரிமோட் மூலம் இயங்கும் தேங்காய் பறிக்கும் இயந்திரம் வடிவமைப்பு
விவசாயிகள் மனிதர்கள் இல்லையா? - நீதிபதிகள் கேள்வி

Advertisement
Posted Oct 01, 2024 in சென்னை,Big Stories,

நடிகர் திலகம் சிவாஜி காலத்தை வென்ற நடிப்புச் சுவடுகள்

Posted Oct 01, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நீங்க நம்பலேன்னாலும் இது தாங்க நெசம் தனியாக ஓடிய பைக்..! ஷாக் காட்சிகளின் பின்னணி

Posted Oct 01, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

பா.ஜ.க கொடி கட்டிய காரில் சென்ற பெண்ணை மறித்து அடித்து கடத்திய கும்பல்..! கிளைமேக்ஸில் காத்திருந்த டுவிஸ்ட்..

Posted Sep 30, 2024 in வீடியோ,Big Stories,

இது தான் பைக்கா..? போலீசாரே...நியாயமா... ? திருடு போன வண்டியின் மீதி..? வாகன ஓட்டி அதிர்ச்சி..

Posted Sep 29, 2024 in வீடியோ,Big Stories,

My v3 ads பணத்திற்காக கணவன் - மனைவி கொலை.. சடலத்தோடு காரில் 2 நாள் ...!


Advertisement