செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சென்னையில் கலைஞர் சிலை திறப்பு.. வெங்கய்யா நாயுடு திறந்து வைத்தார்...

May 28, 2022 10:17:08 PM

சென்னையில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 16 அடி உயர முழு உருவ சிலையை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு திறந்து வைத்தார்.

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் முன்புறம் அண்ணாசாலை ஓரத்தில் கருணாநிதியின் சிலை பொதுப்பணித்துறை சார்பில் நிறுவப்பட்டுள்ளது.

14 அடி உயர பீடத்தில் 16 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் வெண்கல சிலையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு திறந்து வைத்தார். பின்னர் சிலைக்கு கீழ் வைக்கப்பட்ட கலைஞரின் உருவப்படத்திற்கு அவர் மரியாதை செலுத்தினார்.

சுமார் 35 ஆண்டுகளுக்கு பின்னர் சென்னை அண்ணாசாலையில் கலைஞரின் சிலை திறக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு இதுவரை அமைக்கப்பட்ட சிலைகளிலேயே இதுவே உயரமானதாகும்.

இதனை அடுத்து கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், தமிழகத்தில் ஐந்து முறை முதலமைச்சராக இருந்து நவீன தமிழகத்தை உருவாக்கியவர் கலைஞர் கருணாநிதி என குறிப்பிட்டார். அனைத்து துறைகளிலும் கலைஞர் கோலோச்சியவர் என்றும், இலக்கியம், திரைத்துறை என பல துறைகளில் அவர் முத்திரை பதித்தவர் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, கலைஞர் கருணாநிதி மிகச்சிறந்த நிர்வாகி என்றும் நிலையான நல்லரசை தந்தவர் என்றும் பாராட்டுக்களை தெரிவித்தார். மாநிலங்களின் வளர்ச்சியால் தான் நாடு வளரும் என்றும் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மற்ற மொழிகளை கற்பதில் தவறு இல்லை என்றும் நமது தாய் மொழிக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் குறிப்பிட்டார். வீட்டில் எப்போதும் தாய் மொழியிலேயே பேச வேண்டும் என்றும் மம்மி, டாடி கலாச்சாரத்தை விட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், எந்நாட்டிற்கு சென்றாலும் பாரம்பர்ய உடையே அணிந்து செல்வதாக கூறிய வெங்கையா நாயுடு, தான் குடியரசுத் துணை தலைவரான பிறகும் அதனை மாற்றவில்லை என்றார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். 


Advertisement
அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்து விற்ற அக்கா,தங்கை.. கைது செய்த போலீஸ்
நகை வாங்குவது போல நடித்து 70 கிராம் கம்மல் திருடிய பெண்
கணவரை கொன்றவர் குடும்பத்தை பழி தீர்க்கச் சென்ற பெண்.. காவலர் என்று கூறி கூலிப்படையுடன் வீடு புகுந்து கொலை முயற்சி
மதுபான பாட்டில்களுக்கு பில் வழங்கும் சோதனை முயற்சி.. முதற்கட்டமாக 7 மதுபான கடைகளில் சோதனைப் பணி
அண்டை மாநிலங்களில் தாராளமாக மது கிடைக்கும் போது தமிழகத்தில் எப்படி மது விலக்கு கொண்டு வர முடியும்..? - அமைச்சர் ரகுபதி கேள்வி
தம்பியை குத்திக் கொன்ற அண்ணன்.. நிலம் யாருக்குச் சொந்தம் என்பதில் ஏற்பட்ட தகராறில் நடந்த விபரீதம்
நாட்டுத் துப்பாக்கியால் சிறுத்தை சுட்டுக் கொலை.. பா.ம.க பிரமுகர் உட்பட 3 பேரை கைது செய்த வனத்துறை
பெண்ணுக்கு எலி காய்ச்சல் உறுதி.. நோய் தடுப்பு மருந்துகளை வழங்கி வரும் மருத்துவ குழுவினர்
தேங்காய் பறிக்க ஆள் தட்டுப்பாடு இருப்பதால் ரிமோட் மூலம் இயங்கும் தேங்காய் பறிக்கும் இயந்திரம் வடிவமைப்பு
விவசாயிகள் மனிதர்கள் இல்லையா? - நீதிபதிகள் கேள்வி

Advertisement
Posted Oct 01, 2024 in சென்னை,Big Stories,

நடிகர் திலகம் சிவாஜி காலத்தை வென்ற நடிப்புச் சுவடுகள்

Posted Oct 01, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நீங்க நம்பலேன்னாலும் இது தாங்க நெசம் தனியாக ஓடிய பைக்..! ஷாக் காட்சிகளின் பின்னணி

Posted Oct 01, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

பா.ஜ.க கொடி கட்டிய காரில் சென்ற பெண்ணை மறித்து அடித்து கடத்திய கும்பல்..! கிளைமேக்ஸில் காத்திருந்த டுவிஸ்ட்..

Posted Sep 30, 2024 in வீடியோ,Big Stories,

இது தான் பைக்கா..? போலீசாரே...நியாயமா... ? திருடு போன வண்டியின் மீதி..? வாகன ஓட்டி அதிர்ச்சி..

Posted Sep 29, 2024 in வீடியோ,Big Stories,

My v3 ads பணத்திற்காக கணவன் - மனைவி கொலை.. சடலத்தோடு காரில் 2 நாள் ...!


Advertisement