செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மர நிழலுக்காக கடலை கடையில் உருவான கலவரம்.. பூராபேரும் கோபக்காரய்ங்களா இருக்காய்ங்க..!

May 25, 2022 10:04:48 PM

ஆலங்குடியில் வெயில் கொடுமையால் வேப்ப மர நிழலுக்காக கடலை கடை முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தியதால் உருவான பிரச்சனை, இரு வியாபரிகளிடையேயான மோதலாகி அடித்துக் கொண்ட பரபரப்பு காட்சிகள் வெளியாகி உள்ளது..

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கடை வீதியில் ஏராளமான கடலை விதை கடைகள் உள்ளன. இங்கு கடலை விதைகளை வாங்க வந்த விவசாயி விஜய் என்பவர், வேப்பமர நிழலுக்காக தனது இருசக்கரவாகனத்தை தனலெட்சுமி கடலை கடை அருகே நிறுத்தி விட்டு, எதிரில் உள்ள செல்லதுரை என்பவரின் கடைக்கு கடலை விதை வாங்க சென்றதாக கூறப்படுகின்றது.

இதனை பார்த்த தனலெட்சுமி கடலை கடை உரிமையாளர் கண்ணதாசனின் மகன் தனது வண்டியை எடுத்து செல்லத்துடை கடைக்கு முன்பாக கொண்டு மறித்து விட்டதால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் வந்து பேசிக் கொண்டிருந்த போது, கண்ணதாசனின் மற்றொரு மகன், எதிர் கடைக்கு சென்று போலீஸ் முன்னிலையில் செல்லத்துரையை கன்னத்தில் இரண்டுமுறை அடித்து தள்ளி விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

செல்லத்துரை தனது உறவினரை உதவிக்கு அழைக்க, அவர் வந்ததும் செல்லதுரை தன் பங்கிற்கு கண்ணதாசனுக்கு எதிராக சத்தம் போட்டதால் மீண்டும் இரு தரப்பும் சாலையில் நின்று ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்

அங்கிருந்த ஊர் பெரியவர்கள் இருதரப்பையும் சத்தம் போட்டு கடைக்குள் அனுப்பி வைத்து சண்டையை விலக்கி விட்ட நிலையில், இருதரப்பும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், போலீசார் இரு தரப்பினரிடமும் புகார்களை பெற்று விசாரித்து வருகின்றனர்.

விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை என்பதை உணர்ந்து பொறுமையுடன் நடந்து கொண்டால் இது போன்ற சச்சரவுகளை தவிர்க்கலாம் என்று போலீசார் சுட்டிக்காட்டுகின்றனர்.

 


Advertisement
தஞ்சையில் குற்றச் சம்பவங்கள் குறித்து புகார் தெரிவிக்க செயலி அறிமுகம் - 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அறிமுகம்
பெண் சிசு கொலைக்கு ஆதரவாக இருப்பவர்களே பெண்கள் தான் : மதுரை ஆட்சியர்
சவாரிக்கு வந்த பெண்ணை கத்தியால் தாக்கி நகை பறித்த ஆட்டோ ஓட்டுநர்
நாகை காவல் நிலையத்தில் விஷம் குடித்த தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவர்
கோவையில் கோயில் உண்டியல்களை குறி வைத்து தொடர் திருட்டு... 5 பேரை கைது செய்த போலீசார்
திருச்சியில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த 12வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
குமாரப்பாளையம் அருகே லாரி பிரேக் பிடிக்காமல் மோதியதால் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்
மஹாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு எள், பிண்டம் வைத்து தர்ப்பணம்
ஈரோட்டில் மதுபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி வந்து லாரியின் மீது மோதி விபத்து
தமிழ்நாட்டில் இயல்பை விட கூடுதலாக 18 சதவீதம் தென்மேற்குப் பருவமழை பெய்ததாக தகவல்

Advertisement
Posted Oct 02, 2024 in உலகம்,Big Stories,

பகிரங்க மிரட்டல் விடுக்கும் ஈரான்.. பதிலடிக்கு தயாராகும் இஸ்ரேல்.. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம்..

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ஜாலி கொள்ளையன் பராக் மயக்க ஸ்பிரே அடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு..! 150 சிசிடிவி காமிரா மூலம் போலீஸ் ஆக் ஷன்

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வாழ வைக்கும் சென்னையில் இப்படியா ? பசிக்கொடுமை... வேகாத மீனைத் தின்று.. புலம்பெயர் தொழிலாளி பட்டினிச் சாவு..! இறந்த பின் நீண்ட உதவும் கரங்கள்

Posted Oct 01, 2024 in சென்னை,Big Stories,

நடிகர் திலகம் சிவாஜி காலத்தை வென்ற நடிப்புச் சுவடுகள்

Posted Oct 01, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நீங்க நம்பலேன்னாலும் இது தாங்க நெசம் தனியாக ஓடிய பைக்..! ஷாக் காட்சிகளின் பின்னணி


Advertisement