செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

நெஞ்சுக்கு நீதியில்லாமல் பேனர்... போலீஸ்காரர் மீது பாய்ந்தது வழக்கு..!

May 21, 2022 09:48:19 PM

பெரம்பலூரில் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வாழ்த்து தெரிவித்து டிஜிட்டல் ப்ளக்ஸ் பேனர் வைத்த ஆயுதப்படை காவலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இடமாற்றல் உத்தரவை திரும்ப பெறவைப்பதற்கு காவலர் கையாண்ட ராஜதந்திரம் வீணான பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

பெரம்பலூர் ஆயுதப்படை குடியிருப்பில் வசித்து வருபவர் காவலர் கதிரவன். இவர் பெரம்பலூரிலிருந்து தஞ்சாவூருக்கு பணிடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் பணியில் சேராமல் மருத்துவ விடுப்பில் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவர் பெரம்பலூர் பாலக்கரை சந்திப்பில் உதயநிதி நடிப்பில் வெளியாகியுள்ள நெஞ்சுக்குநீதி திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து ப்ளக்ஸ் பேனர் ஒன்றை வைத்து, தான் உதய நிதிக்கு நெருக்கம் என்பது போல காட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது.

பேனரில் அவரின் பெயருடன் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை என போட்டிருந்ததால் மற்ற போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சமூக வலைதளங்களில் இந்த பேனர் படம் வைரலானதால், உடனடியாக அந்த பிளக்ஸ் பேனர் அகற்றப்பட்டது. பாலக்கரை காவல் உதவி ஆய்வாளர் இளையபெருமாள் கொடுத்த புகாரின் பேரில் காவலர் கதிரவன் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

போர்டு வைத்த போலீஸ்காரர் கதிரவன் மீது தமிழ்நாடு திறந்தவெளி அழகை சிதைக்கும் சட்டம் பிரிவு 4ன் கீழ் வழக்குபதிவு செய்து பெரம்பலூர் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

இடமாற்றல் உத்தரவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரும்ப பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பிளக்ஸ் பேனரை கதிரவன் அங்கு வைத்ததாக கூறப்படும் நிலையில் கதிரவன் மேற்கொண்ட ராஜதந்திரம் வீணாகி பணியிடை நீக்கம் செய்யப்படும் சூழல் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement
சிவகங்கை குன்றக்குடி கோவில் யானை சுப்புலட்சுமி தீ விபத்தில் இறந்த விவகாரத்தில் யானைப்பாகன் கைது
ராணிப்பேட்டையில் வேன் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தி 20 பேர் காயம்
நா.த. கட்சியினரின்அவதூறான, ஆபாசமான பதிவுகளை நீக்கக்கோரி எஸ்.பி வருண்குமார் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு
கொடி காத்த குமரனின் 121-வது பிறந்த நாள்... தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மரியாதை
20 செ.மீ மழை பொழிவையும் எதிர்கொள்ள தயார் நிலை.. மாநகராட்சி ஆணையர்
பூக்கடையில் முதலீடு செய்தால் அதிக வட்டித் தருவதாகக் கூறி ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த தம்பதி..
கொலை வழக்கில் கைதானவர் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு..!
ரெக்கி ஆபரேஷனில் சிக்கிய ஆம்ஸ்ட்ராங்.. 4 ரவுடிகளின் 6 மாத பிளான்.. 4,892 பக்க குற்றப்பத்திரிகை... யானை சாய்க்கப்பட்டதன் திகில் பின்னணி...
வீடு திரும்பினார் ரஜினிகாந்த்..!
தசராவிற்கு காப்புக்கட்டி விட்டு திரும்பிய போது லோடு ஆட்டோ-லாரி மோதல்: இளைஞர்கள் 2 பேர் உயிரிழப்பு

Advertisement
Posted Oct 04, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

ரெக்கி ஆபரேஷனில் சிக்கிய ஆம்ஸ்ட்ராங்.. 4 ரவுடிகளின் 6 மாத பிளான்.. 4,892 பக்க குற்றப்பத்திரிகை... யானை சாய்க்கப்பட்டதன் திகில் பின்னணி...

Posted Oct 03, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அங்கன்வாடி மையத்தில் தப்பும் தவறுமாக தமிழ் ஆரம்பமே அமர்க்களமா..? என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை

Posted Oct 02, 2024 in உலகம்,Big Stories,

பகிரங்க மிரட்டல் விடுக்கும் ஈரான்.. பதிலடிக்கு தயாராகும் இஸ்ரேல்.. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம்..

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ஜாலி கொள்ளையன் பராக் மயக்க ஸ்பிரே அடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு..! 150 சிசிடிவி காமிரா மூலம் போலீஸ் ஆக் ஷன்

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வாழ வைக்கும் சென்னையில் இப்படியா ? பசிக்கொடுமை... வேகாத மீனைத் தின்று.. புலம்பெயர் தொழிலாளி பட்டினிச் சாவு..! இறந்த பின் நீண்ட உதவும் கரங்கள்


Advertisement