செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

மேட்டூர் அணையில் இருந்து மே 24 முதல் நீர் திறப்பு - முதலமைச்சர் உத்தரவு

May 21, 2022 03:23:29 PM

மேட்டூர் அணை நீர்மட்டம் 115 அடியை கடந்துள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் பயிரிடுவதற்காக அணையில் இருந்து மே 24ஆம் நாள் முதல் தண்ணீரைத் திறந்துவிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடகத்திலும் தமிழகத்திலும் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்ததால் நேற்று ஒகேனக்கல்லில் நீர்வரத்து நொடிக்கு 45 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இன்று நீர்வரத்து 35ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது.

 

இன்று காலை நிலவரப்படி காவிரியில் மேட்டூர் அணைக்கு நொடிக்கு 46 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 115 அடியாகவும், நீர் இருப்பு 86 புள்ளி 2 டிஎம்சியாகவும் உள்ளது. நீர்வரத்து தொடர்வதால் அணை விரைவில் முழுக் கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அணைப்பகுதியில் பொதுப்பணித்துறையினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

 

குறுவை நெல் பயிரிடுவதற்காக ஜூன் 12ஆம் நாள் முதல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். இந்த ஆண்டு அதற்கு முன்பே அணை முழுக் கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால் மே 24 முதல் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

நாடு விடுதலை அடைந்த பின் குறுவைப் பயிருக்காக ஜூன் 12 அல்லது அதற்கு முன் தொடர்ந்து மூன்றாண்டுகள் நீர் திறந்து விடப்படுவது இது இரண்டாவது முறையாகும். மே மாதத்தில் தண்ணீர் திறந்து விடுவது இதுவே முதல்முறையாகும். இதனால் டெல்டா மாவட்டங்களில் 4 இலட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
மீன்பிடி படகுகள் மீது மோதிய சரக்கு கப்பல்.. நடுக்கடலில் விழுந்த 13 மீனவர்களும் உயிர் தப்பினர்..!
சுற்றுலாப் பயணி தவற விட்ட தங்கச் சங்கிலியை கண்டெடுத்து ஒப்படைத்த 2 சிறுவர்களுக்கு வனத்துறையினர் பாராட்டு
ஊராட்சி வளர்ச்சித்திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டினர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
சிவகங்கை குன்றக்குடி கோவில் யானை சுப்புலட்சுமி தீ விபத்தில் இறந்த விவகாரத்தில் யானைப்பாகன் கைது
ராணிப்பேட்டையில் வேன் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தி 20 பேர் காயம்
நா.த. கட்சியினரின்அவதூறான, ஆபாசமான பதிவுகளை நீக்கக்கோரி எஸ்.பி வருண்குமார் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு
கொடி காத்த குமரனின் 121-வது பிறந்த நாள்... தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மரியாதை
20 செ.மீ மழை பொழிவையும் எதிர்கொள்ள தயார் நிலை.. மாநகராட்சி ஆணையர்
பூக்கடையில் முதலீடு செய்தால் அதிக வட்டித் தருவதாகக் கூறி ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த தம்பதி..
கொலை வழக்கில் கைதானவர் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு..!

Advertisement
Posted Oct 04, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

ரெக்கி ஆபரேஷனில் சிக்கிய ஆம்ஸ்ட்ராங்.. 4 ரவுடிகளின் 6 மாத பிளான்.. 4,892 பக்க குற்றப்பத்திரிகை... யானை சாய்க்கப்பட்டதன் திகில் பின்னணி...

Posted Oct 03, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அங்கன்வாடி மையத்தில் தப்பும் தவறுமாக தமிழ் ஆரம்பமே அமர்க்களமா..? என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை

Posted Oct 02, 2024 in உலகம்,Big Stories,

பகிரங்க மிரட்டல் விடுக்கும் ஈரான்.. பதிலடிக்கு தயாராகும் இஸ்ரேல்.. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம்..

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ஜாலி கொள்ளையன் பராக் மயக்க ஸ்பிரே அடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு..! 150 சிசிடிவி காமிரா மூலம் போலீஸ் ஆக் ஷன்

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வாழ வைக்கும் சென்னையில் இப்படியா ? பசிக்கொடுமை... வேகாத மீனைத் தின்று.. புலம்பெயர் தொழிலாளி பட்டினிச் சாவு..! இறந்த பின் நீண்ட உதவும் கரங்கள்


Advertisement