செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

தோழி பிறந்தநாள் விழாவில் ‘ கேக் ’ சாப்பிட்ட சிறுமி பலி..! புட் பாய்சன் விபரீதம்

May 21, 2022 10:01:06 AM

ராணிபேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே தோழியின் பிறந்தநாள் விழாவில் கேக் சாப்பிட்ட சிறுமி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். விரும்பிய உணவே விஷமான விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித் தொகுப்பு.

ராணிபேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே தாஜ்புரா பகுதியைச் சேர்ந்தவர் கவிதா. இவரது 2வது மகள் 16 வயதான அபிராமி. தந்தை கார்த்திகேயன் இறந்துவிட்டதால் தாயின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.

ஆற்காடு தோப்புகானா பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் 3 ஆண்டுகளுக்கு முன்பு 9-ஆம் வகுப்பு வரை படித்துவந்த அபிராமி, தந்தையின் மரணத்துக்கு பின்னர் பள்ளிப்படிப்பை நிறுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 18-ஆம் தேதி இரவு அபிராமி தனது நெருங்கிய தோழியின் பிறந்தநாள் விழாவிற்கு சென்று கேக் சாப்பிட்டு விட்டு இரவு வீட்டிற்கு திரும்பி உள்ளார்.

அப்பொழுது அம்மாவிடம் பிறந்தநாள் விழாவில் அதிகமாக கேக் சாப்பிட்டதால் வயிறு வலிப்பதாகத் தெரிவித்துள்ளார். இதனால் கவிதா சோடா வாங்கிக் கொடுத்துள்ளார். சோடாவை குடித்துவிட்டு உறங்கிய அபிராமி 19ந்தேதி காலை வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்ததாக கூறப்படுகின்றது. தகவலறிந்த ஆற்காடு தாலுகா காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர் சரவணன், அபிராமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

அளவுக்கதிகமாக நிறமிகள் சேர்க்கப்பட்ட கேக் சாப்பிட்டதால் புட் பாய்சன் ஏற்பட்டு அதன் காரணமாக அபிராமி உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், பிணக்கூறாய்வுக்கு பின்னரே அபிராமியின் உயிரிழப்புக்கான முழுமையான காரணம் தெரியவரும் என்று கூறப்படுகின்றது.

அபிராமியுடன் கேக் சாப்பிட்ட மற்றவர்களின் உடல்நிலை குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அதே நேரத்தில் கேரளாவில் சவர்மா சாப்பிட்டு மாணவி பலியான சம்பவத்தின் அறிகுறிகள் அபிராமியின் மரணத்திலும் காணப்படுவதால் வட்டார உணவு பொருள் பாதுகாப்பு மற்றும் கலப்பட தடுப்பு அதிகாரிகள் அந்த கேக்கை தயாரித்த கடை குறித்து விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement
ஒரே நாளில் 3 சிறுவர்களைக் கடித்துக் குதறிய தெரு நாய்கள்
கோவையின் அடையாளமாகத் திகழ்ந்தவர் பத்மஸ்ரீ பாப்பம்மாள்: வானதி
கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல புதிய நடைமுறை
சுருளி அருவிக்கு அருகே நடைபெறும் சாரல் விழா 2024 - தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்..!!
செந்தில் பாலாஜி அன்று ஊழல்வாதி, இன்று தியாகியா..? : எச்.ராஜா கேள்வி
திருப்பதி லட்டு விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க நடிகர் ரஜினிகாந்த் மறுப்பு
பைக் மீது கார் மோதி விபத்து.. கல்லூரி மாணவன் படுகாயம்
ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயற்சி.. துறைமுகத்தில் பதுங்கி இருந்த வடமாநில கொள்ளையன் கைது
பத்மஸ்ரீ விருது பெற்ற 108 வயது பாப்பம்மாள் பாட்டி உடல்நலக் குறைவால் காலமானார்..!
அரசு பேருந்தில் மது பாட்டில்கள் கடத்தல்.. சோதனையில் வசமாக சிக்கிய அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்

Advertisement
Posted Sep 28, 2024 in Big Stories,

தூக்குப்பா.. தூக்கிப் போடுங்க.. இப்படி ஒரு ஆபீசர் தான் வேணும்.. நடைபாதை நடக்குறதுக்கு தானே ?.. போலீசார் அதிரடி காட்டிய காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்டெய்னருக்குள் க்ரெட்டா கார் பணத்துடன் தப்பிய கொள்ளை கும்பல் கொக்கி கொள்ளையன் சுட்டுக் கொலை..! பட்டப்பகலில் பர பர சேசிங் காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஏ.டி.எம் கொள்ளையர்களுடன் சென்ற கண்டெய்னர்.. தீரன் பட பாணியில் தப்ப முயன்ற கும்பல்... போலீஸ் என்கவுன்டரில் ஒருவன் பலி, 5 பேர் கைது

Posted Sep 28, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

மழை நீர் மேலே.. தார்ச்சாலை என்ன ஒரு புத்திசாலி தனம்.. உத்தரவுக்கு கீழ்படிகிறார்களாம்..! தரமற்ற சாலைப் பணிக்கு மக்கள் எதிர்ப்பு

Posted Sep 27, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நான் ஆம்பளடா.. அடாவடி ஆட்டோ ஓட்டுனரை பிடித்து அடக்கிய அந்த இரு பெண்கள் ..! போக்குவரத்து ஊழியர்களுக்கு அடி உதை


Advertisement