செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பெற்ற மகள்களை அடித்தே கொன்ற தந்தை.. தீக்குளித்த மற்றொரு மகள்.. குடியால் அரங்கேறிய கொடூரங்கள்..!

May 21, 2022 09:44:07 AM

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில், தினசரி குடித்துவிட்டு வந்து வீட்டில் ரகளை செய்த தந்தையால் ஒரு மகள் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்ட நிலையில், இரண்டு மகள்களை அந்த கொடூரத் தந்தை அடித்தே கொன்ற நிகழ்வு அரங்கேறியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த சின்ன மதுரபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் - கீதா தம்பதிக்கு ஒரு மகன், 3 மகள்கள் என 4 பிள்ளைகள் இருந்தனர். வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்த கோவிந்தராஜ், கூலி வேலைக்குச் செல்லும் மனைவியிடம் இருந்து பணத்தை மிரட்டி வாங்கி தினசரி குடித்துவிட்டு வந்து, அவரையும் பிள்ளைகளையும் அடித்துத் துன்புறுத்துவது வழக்கம் என்று கூறப்படுகிறது.

வெள்ளிக்கிழமை கோவிந்தராஜ் வழக்கம்போல் குடித்துவிட்டு வந்தபோது கீதா வெளியே சென்றிருந்த நிலையில், 16 வயது மூத்த மகள் நந்தினியும் 10 வயதான கடைசி மகள் தீபாவும் வீட்டில் இருந்துள்ளனர். போதையின் உச்சத்தில் வந்த கோவிந்தராஜ், அம்மா எங்கே என மகள்கள் இருவரிடமும் கேட்டுள்ளான்.

"ஏன் இப்படி தினசரி குடித்துவிட்டு வந்து அம்மாவை தொல்லை செய்கிறாய்" ? என அவர்கள் இருவரும் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தராஜ், கையில் கிடைத்த கம்பி, கட்டை ஆகியவற்றை எடுத்து மகள்கள் இருவரையும் சரமாரியாகத் தாக்கியுள்ளான்.

முகம், கை, கால், தலைப் பகுதி என கண்மூடித்தனமாகத் தாக்கியதில் சிறுமிகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். சிறுமிகளின் அலறல் சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், கோவிந்தராஜை சுற்றிவளைத்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

போலீசார் விசாரணையில் கோவிந்தராஜுவின் மற்றொரு பெண் குழந்தை அவனது கொடுமை தாங்காமல் கடந்த மாதம் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. பெற்ற தந்தையின் குடிப்பழக்கத்தால் 3 பிஞ்சுகள் அடுத்தடுத்து கொடூரமான முறையில் பலியான சம்பவம் ஒரகடம் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 


Advertisement
சுற்றுலாப் பயணி தவற விட்ட தங்கச் சங்கிலியை கண்டெடுத்து ஒப்படைத்த 2 சிறுவர்களுக்கு வனத்துறையினர் பாராட்டு
ஊராட்சி வளர்ச்சித்திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டினர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
சிவகங்கை குன்றக்குடி கோவில் யானை சுப்புலட்சுமி தீ விபத்தில் இறந்த விவகாரத்தில் யானைப்பாகன் கைது
ராணிப்பேட்டையில் வேன் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தி 20 பேர் காயம்
நா.த. கட்சியினரின்அவதூறான, ஆபாசமான பதிவுகளை நீக்கக்கோரி எஸ்.பி வருண்குமார் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு
கொடி காத்த குமரனின் 121-வது பிறந்த நாள்... தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மரியாதை
20 செ.மீ மழை பொழிவையும் எதிர்கொள்ள தயார் நிலை.. மாநகராட்சி ஆணையர்
பூக்கடையில் முதலீடு செய்தால் அதிக வட்டித் தருவதாகக் கூறி ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த தம்பதி..
கொலை வழக்கில் கைதானவர் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு..!
ரெக்கி ஆபரேஷனில் சிக்கிய ஆம்ஸ்ட்ராங்.. 4 ரவுடிகளின் 6 மாத பிளான்.. 4,892 பக்க குற்றப்பத்திரிகை... யானை சாய்க்கப்பட்டதன் திகில் பின்னணி...

Advertisement
Posted Oct 04, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

ரெக்கி ஆபரேஷனில் சிக்கிய ஆம்ஸ்ட்ராங்.. 4 ரவுடிகளின் 6 மாத பிளான்.. 4,892 பக்க குற்றப்பத்திரிகை... யானை சாய்க்கப்பட்டதன் திகில் பின்னணி...

Posted Oct 03, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அங்கன்வாடி மையத்தில் தப்பும் தவறுமாக தமிழ் ஆரம்பமே அமர்க்களமா..? என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை

Posted Oct 02, 2024 in உலகம்,Big Stories,

பகிரங்க மிரட்டல் விடுக்கும் ஈரான்.. பதிலடிக்கு தயாராகும் இஸ்ரேல்.. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம்..

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ஜாலி கொள்ளையன் பராக் மயக்க ஸ்பிரே அடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு..! 150 சிசிடிவி காமிரா மூலம் போலீஸ் ஆக் ஷன்

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வாழ வைக்கும் சென்னையில் இப்படியா ? பசிக்கொடுமை... வேகாத மீனைத் தின்று.. புலம்பெயர் தொழிலாளி பட்டினிச் சாவு..! இறந்த பின் நீண்ட உதவும் கரங்கள்


Advertisement