செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் அரசு பள்ளி மாணவர்கள், பள்ளி வாசலிலேயே இரு குழுக்களாக பிரிந்து சரமாரியாக தாக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
இப்பள்ளியில் பயிலும் 11, 12ம் வகுப்பு மாணவர்கள் நேற்று பிற்பகல் பொதுத் தேர்வை எழுதிவிட்டு வெளியே வந்துள்ளனர். அப்போது திடீரென 11ம் வகுப்பு மாணவர்களுக்கும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
இந்த வீடியோ இணையத்தில் பரவி வரும் நிலையில், மாணவர்கள் மோதலில் ஈடுபட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பள்ளி தலைமையாசிரியர் தெரிவித்துள்ளார்.