செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

விசா முறைகேடு வழக்கு.. கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது.. சிபிஐ அதிரடி நடவடிக்கை.!

May 18, 2022 09:56:05 PM

சீனர்களுக்குச் சட்டவிரோதமாக விசா வழங்கி முறைகேடு செய்த வழக்கில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

2010ஆம் ஆண்டு வேதாந்தா நிறுவனத்துக்குச் சொந்தமான அனல் மின்நிலையப் பணிக்கு வந்த சீனர்கள் 263 பேருக்கு விசாக் காலத்தை நீட்டிக்க அப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் 50 இலட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

ஸ்டெர்லைட் வேதாந்தா குழும நிறுவனத்தின் இயக்குநராகச் சிதம்பரம் இருந்ததைச் சுட்டிக்காட்டியுள்ள சிபிஐ, மும்பையில் உள்ள ஸ்டெர்லைட் நிறுவனத்தில் இருந்து சென்னையில் இயங்கிய மெல்ட்ராக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலம் கார்த்தி சிதம்பரத்திற்கு ஒன்றரைக் கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் செய்திருப்பதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம், அவரது ஆடிட்டர் பாஸ்கர ராமன், டிஎஸ்பிஎல் நிறுவன நிர்வாகி விகாஸ், மும்பையைச் சேர்ந்த பெல் நிறுவனம் மற்றும் அடையாளம் தெரியாத உள்துறை அமைச்சக ஊழியர்கள் மீது கூட்டுச்சதி, போலி ஆவணங்களை உருவாக்கி மோசடி செய்தல் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் நேற்றுக் கார்த்தி சிதம்பரம், பாஸ்கர ராமன் ஆகியோரின் வீடு, அலுவலகத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், இன்று பாஸ்கர ராமனைக் கைது செய்தனர். லண்டனில் உள்ள கார்த்தி சிதம்பரத்துக்கு சி.பி.ஐ சம்மன் அனுப்ப உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Advertisement
சுற்றுலாப் பயணி தவற விட்ட தங்கச் சங்கிலியை கண்டெடுத்து ஒப்படைத்த 2 சிறுவர்களுக்கு வனத்துறையினர் பாராட்டு
ஊராட்சி வளர்ச்சித்திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டினர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
சிவகங்கை குன்றக்குடி கோவில் யானை சுப்புலட்சுமி தீ விபத்தில் இறந்த விவகாரத்தில் யானைப்பாகன் கைது
ராணிப்பேட்டையில் வேன் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தி 20 பேர் காயம்
நா.த. கட்சியினரின்அவதூறான, ஆபாசமான பதிவுகளை நீக்கக்கோரி எஸ்.பி வருண்குமார் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு
கொடி காத்த குமரனின் 121-வது பிறந்த நாள்... தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மரியாதை
20 செ.மீ மழை பொழிவையும் எதிர்கொள்ள தயார் நிலை.. மாநகராட்சி ஆணையர்
பூக்கடையில் முதலீடு செய்தால் அதிக வட்டித் தருவதாகக் கூறி ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த தம்பதி..
கொலை வழக்கில் கைதானவர் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு..!
ரெக்கி ஆபரேஷனில் சிக்கிய ஆம்ஸ்ட்ராங்.. 4 ரவுடிகளின் 6 மாத பிளான்.. 4,892 பக்க குற்றப்பத்திரிகை... யானை சாய்க்கப்பட்டதன் திகில் பின்னணி...

Advertisement
Posted Oct 04, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

ரெக்கி ஆபரேஷனில் சிக்கிய ஆம்ஸ்ட்ராங்.. 4 ரவுடிகளின் 6 மாத பிளான்.. 4,892 பக்க குற்றப்பத்திரிகை... யானை சாய்க்கப்பட்டதன் திகில் பின்னணி...

Posted Oct 03, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அங்கன்வாடி மையத்தில் தப்பும் தவறுமாக தமிழ் ஆரம்பமே அமர்க்களமா..? என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை

Posted Oct 02, 2024 in உலகம்,Big Stories,

பகிரங்க மிரட்டல் விடுக்கும் ஈரான்.. பதிலடிக்கு தயாராகும் இஸ்ரேல்.. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம்..

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ஜாலி கொள்ளையன் பராக் மயக்க ஸ்பிரே அடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு..! 150 சிசிடிவி காமிரா மூலம் போலீஸ் ஆக் ஷன்

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வாழ வைக்கும் சென்னையில் இப்படியா ? பசிக்கொடுமை... வேகாத மீனைத் தின்று.. புலம்பெயர் தொழிலாளி பட்டினிச் சாவு..! இறந்த பின் நீண்ட உதவும் கரங்கள்


Advertisement