செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஆபாச வழக்கில் சிக்கிய ஆயாவுடன் ஜெயில் சினேகம்.. ஜேப்படி ஜெயாவுக்கு ஆப்பு..!

May 18, 2022 03:51:37 PM

மதுரையில் ஆபாச பட வழக்கில் சிக்கி சிறையில் கம்பி எண்ணிவரும் ஆசிரியையுடன் நட்பு ஏற்படுத்திக் கொண்ட ஜேப்படி பெண் ஒருவர், ஜாமீன் எடுக்க உதவுவது போல நடித்து ஆசிரியையின் உறவினர் வீட்டிற்குள் புகுந்து நகை, பணம், லேப்டாப்பை அபேஸ் செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

மதுரை பெத்தானியாபுரம் பகுதியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை ராதிகா இவர் கடந்த 2 மாதத்திற்கு முன்னர் ஆபாச பட வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

அதே சிறையில் சிவகாசியை அடுத்த பள்ளப்பட்டி இந்திரா நகரை சேர்ந்த ஜேப்படி பெண் ஜெயா என்பவர் திருட்டு வழக்கில் கைதாகி இதே சிறையில் இருக்கும் நிலையில் இரு கேடிகளும் நட்பாக பழகி உள்ளனர்.

ஆசிரியை ராதிகாவிடம் தான் சீக்கிரம் வெளியே போய் விடுவேன் உன்னை எப்படியும் ஜாமினில் எடுக்க நான் உதவி செய்கிறேன் என அடிக்கடி ஜெயா ஆறுதல் கூறி உள்ளார்

இதை நம்பிய ஆசிரியை ராதிகா தனது வீட்டு முகவரி மற்றும் உறவினரின் போன் நம்பர் என அனைத்தையும் ஜெயாவிடம் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த வாரம் ஜெயிலில் இருந்து வெளியே வந்த ஜெயா, பெத்தானியாபுரம் பகுதியிலுள்ள ஆசிரியை ராதிகா வீட்டிற்கும், உறவினர் வீட்டிற்கும் சென்று சிறையில் நாங்கள் இருவரும் ஒன்றாக நல்ல நட்புடன் பழகி உள்ளோம். அவரை எப்படியும் ஜாமீனில் எடுக்க நான் உதவி செய்கிறேன் நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்றும், கூறியுள்ளார்.

ஜெயா கூறியதை ராதிகாவின் உறவினர்கள் நம்பி, கேடி ஜெயாவை வீட்டினுள் அழைத்து சென்று உபசரித்து அனுப்பியுள்ளனர். இரு தினங்கள் கழித்து மீண்டும் ஜெயா, ராதிகாவின் உறவினர் வீட்டிற்கு சென்று பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.

அப்போது ராதிகாவின் உறவினர், வீட்டை பார்த்துக் கொள்ளுங்கள் அருகே உள்ள கடைக்கு போய் விட்டு வருகிறேன் என்று கூறிச் சென்றுள்ளார்.

அவர் திரும்பி வருவதற்கு முன்பு நைசாக பீரோவில் இருந்த மூன்றரை சவரன் தங்க சங்கிலி, மோதிரம், லேப்டாப் , பணம் உள்ளிட்டவற்றை திருடிக்கொண்டு ஜேப்படி ஜெயா தலைமறைவாகி விட்டார்.

இதுகுறித்து கரிமேடு போலீசில் ராதிகாவின் உறவினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு சிவகாசியில் தலைமறைவாக இருந்த ஜெயாவை கைது செய்து அவள் திருடிச் சென்றவற்றையும் பறிமுதல் செய்தனர்.

ராதிகா உறவினரின் வீடுபுகுந்து கைவரிசை காட்டிய ஜெயாவை மீண்டும் மதுரை மத்திய சிறைக்கே போலீசார் அனுப்பி வைத்தனர்.

ஏற்கனவே மாணவர்களுடனான வில்லங்க சிந்தனையால் ராதிகா ஆபாச படவழக்கில் சிக்கி கம்பி எண்ணிவரும் நிலையில், ஜெயாவுடனான ஜெயில் சினேகத்தால் ராதிகாவின் உறவினர் வீட்டில் கொள்ளை போயிருப்பது குறிப்பிடதக்கது.


Advertisement
ஈச்சர் வாகனத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.16 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்
"திமுகவின் பெயர், கொடி ,சின்னம் மாறவில்லை, எதிரிகளின் வடிவம் மாறியிருக்கலாம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் நடைபெறுகிறது 'சைக்ளோத்தான் - 2024' போட்டி.. கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம்..
கடன்தொல்லை, காதல் தோல்வியால் இளைஞர் தற்கொலை..
தேனி அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர்மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
கோயம்புத்தூரில் மாணவர்கள் தங்கும் விடுதிகளில் காவல்துறை சோதனை
கோவை தனியார் நட்சத்திர ஓட்டலில் கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு 500 கிலோ கேக் தயாரிப்பு
தமிழகத்தில் புரட்டாசி மாத 3வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்
வேலூரில் ஆவணங்களை காண்பிக்க மறுத்து போலீஸாருடன் தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் வாக்கு வாதம்
தூத்துக்குடி மாவட்டம் நவதிருப்பதி கோவில்களுக்கு திருக்குடைகள் வழங்கும் விழா

Advertisement
Posted Oct 04, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

ரெக்கி ஆபரேஷனில் சிக்கிய ஆம்ஸ்ட்ராங்.. 4 ரவுடிகளின் 6 மாத பிளான்.. 4,892 பக்க குற்றப்பத்திரிகை... யானை சாய்க்கப்பட்டதன் திகில் பின்னணி...

Posted Oct 03, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அங்கன்வாடி மையத்தில் தப்பும் தவறுமாக தமிழ் ஆரம்பமே அமர்க்களமா..? என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை

Posted Oct 02, 2024 in உலகம்,Big Stories,

பகிரங்க மிரட்டல் விடுக்கும் ஈரான்.. பதிலடிக்கு தயாராகும் இஸ்ரேல்.. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம்..

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ஜாலி கொள்ளையன் பராக் மயக்க ஸ்பிரே அடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு..! 150 சிசிடிவி காமிரா மூலம் போலீஸ் ஆக் ஷன்

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வாழ வைக்கும் சென்னையில் இப்படியா ? பசிக்கொடுமை... வேகாத மீனைத் தின்று.. புலம்பெயர் தொழிலாளி பட்டினிச் சாவு..! இறந்த பின் நீண்ட உதவும் கரங்கள்


Advertisement