செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பேரறிவாளன் விடுதலை - உச்சநீதிமன்றம் தீர்ப்பு.. 31 ஆண்டுகால சிறைவாசம் முடிவு..!

May 18, 2022 04:09:56 PM

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு 31ஆண்டுக்காலம் சிறையில் இருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

1991ஆம் ஆண்டு மே 21ஆம் நாள் சென்னை அருகே திருப்பெரும்புதூரில் தேர்தல் பொதுக்கூட்டத்தின்போது முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் உடலில் குண்டுகளைக் கட்டி வந்த பெண் மற்றும் 14 பேர் உயிரிழந்தனர். இது குறித்து விசாரித்த சிபிஐ, கொலைக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி 1991 ஜூன் 11ஆம் நாள் பேரறிவாளனைக் கைது செய்தது.

1998ஆம் ஆண்டு தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்றம் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட 26 பேருக்கு மரண தண்டனை விதித்தது. 1999ஆம் ஆண்டு நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகிய 4 பேரின் மரண தண்டனையைச் சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. 2000ஆவது ஆண்டில் நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

2014 பிப்ரவரி 18ஆம் நாளில் உச்ச நீதிமன்றம் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் காலம் முடிந்த பிறகும் சிறையில் இருந்த பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க 2014 பிப்ரவரி 19ஆம் நாள் தமிழக அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது.

பேரறிவாளனை விடுவிக்கத் தீர்மானித்த மாநில அரசின் தீர்மானத்தை நிறைவேற்றாமல் ஆளுநர் கிடப்பில் வைத்திருந்தார். இதனிடையே சிறையில் இருந்து அவ்வப்போது பரோல் பெற்று வெளியே வந்த பேரறிவாளனுக்கு கடந்த மார்ச் 9ஆம் நாள் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. சிறையில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரிப் பேரறிவாளன் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய, மாநில அரசுகள் எழுத்துப்பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்திருந்தன. அவரை விடுவிக்கும் அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் சார்பில் வாதங்கள் நடைபெற்றன.

மே 11ஆம் நாள் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், கவாய், போபண்ணா அமர்வு, பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க ஆளுநர் தாமதப்படுத்தியதால், அரசியலமைப்புச் சட்டத்தின் 142ஆவது பிரிவின்படி உச்சநீதிமன்றமே விடுதலை செய்வதாகத் தெரிவித்தனர்.


Advertisement
இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...
தேயிலை தோட்ட தொழிலாளியை கடித்துக் குதறிய கரடி
தனியார் கிளினிக்கில் தவறான சிகிச்சை.. வயிற்று வலிக்குத் தவறான சிகிச்சை அளித்ததால் இளைஞர் பலி
இளம்பெண்ணுடன் போட்டோ எடுத்து வைத்து மருத்துவருக்கு மிரட்டல்.. ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய கும்பலை கைது செய்த போலீஸ்
பிரபல சென்னை ரவுடி CD மணி சேலத்தில் கைது - துப்பாக்கி முனையில் கைது செய்த தனிப்படை போலீஸ்
கெட்டுப் போன பப்ஸ் விற்பனை செய்த புகார் - சேலம் பத்மாலயா திரையரங்கின் கேண்டீனுக்கு சீல்
சட்டவிரோத மின்வேலியில் சிக்கி 15 வயது சிறுவன் உள்பட 3 பேர் பலி - போலீசார் விசாரணை
தரக்குறைவாகப் பேசியதால் தாக்குதல்.. பெட்டிக்கடைக்காரரை வெட்டிக் கொலை செய்த 3 பேர் கைது
குப்பைக் கிடங்கில் குப்பையோடு குப்பையாகக் கிடந்த வைரத் தோடு - கண்டுபிடித்துக் கொடுத்த தூய்மைப் பணியாளர்கள்..!!
முழுநேர அரசியல்வாதி என இங்கு யாரும் இல்லை - கமல்ஹாசன்

Advertisement
Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி

Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?


Advertisement