செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கோயில் நிலையமான மகளிர் காவல் நிலையம்..! எல்லாம் மேலே இருக்குறவன் பார்த்துப்பான்..!

May 18, 2022 08:28:24 AM

காவல் நிலையங்களில் வைத்து  வழக்கு தொடர்பானவர்களிடம் விசாரிக்க கூடாது என்று டிஜிபி உத்தரவிட்டதால், கடலூர் காவல் நிலைய போலீசார் அங்குள்ள கோவில் ஒன்றில் வைத்து வழக்குகளை விசாரித்து வருகின்றனர்.

சென்னையில் விசாரணை கைதி காவல் நிலையத்தில் வைத்து கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, தமிழக டிஜிபி அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார்.

அதில் காவல் நிலையத்திற்கு வரும் புகார்கள் குறித்து நேரடியாக சென்று விசாரிக்க வேண்டும் என்றும், காவல் நிலையங்களில் அவர்களை அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ள கூடாது என்றும் உத்தரவிட்டு இருந்தார்.

ஆனால் மகளிர் காவல் நிலையங்களுக்கு வரும் புகார்களை அந்த இடத்தில் சென்று விசாரிப்பது அவ்வளவு சாத்தியமாக இல்லை. இதனால் கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் காவல் நிலைய வளாகத்திற்குள் உள்ள ஒரு கோவிலை தற்போது காவல் நிலையமாக மாற்றியுள்ளனர்.

இந்த கோவிலிலேயே ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவலர்கள் என அனைவரும் தங்களுக்கு வரும் புகார்கள் குறித்து அவர்களை நேரில் வரவழைத்து விசாரித்து வருகின்றனர்.

நாளொன்றுக்கு 10 க்கும் மேற்பட்ட புகார்கள் இந்த மகளிர் காவல் நிலையத்திற்கு வரும் நிலையில் காவலர்கள் பற்றாக்குறை காரணமாக நேரடியாகச் சென்று விசாரித்து அந்த புகார் மீது நடவடிக்கை எடுப்பது என்பது சாத்தியம் இல்லாமல் இருப்பதால் இவர்கள் காவல்நிலையத்தில் வைத்து விசாரிக்கத் கூடாது என்று டிஜிபி உத்தரவை கடைபிடிக்கும் அதே நேரத்தில், பொது இடமான கோவிலை காவல் நிலையமாக மாற்றி விசாரித்து வருகின்றனர்.

புகார்களுக்கு உள்ளானவர்களை நேரில் வரவழைத்து அவர்களை அந்த கோவிலுக்கு உள்ளேயே வைத்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடதக்கது.

அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான காவல் நிலையங்களில் போலீசார் பற்றாக்குறையை சரி செய்தால், வீடு தேடிச்சென்று விசாரிக்கும் பணியை இன்னும் விரைவாக நிறைவேற்ற இயலும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Advertisement
அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் டெக்னீஷியன்களை நியமிக்க உத்தரவு: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு
பாதுகாப்பு கருதி மழைக்கு முன்னதாக பக்கிங்காம் கால்வாயில் கட்டப்பட்ட தடுப்பணை ஷட்டர்கள் உடைப்பு
திருநெல்வேலியில் நீர்நிலையில் கட்டடம் கட்டி நிதியை வீணடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு
அரசுப் பெண்கள் பள்ளி மாணவிகள் வளைகாப்பு ரீல்ஸ்... வகுப்பு ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம்
உளுந்தூர்பேட்டையில் போலியான ஆவணங்களை பயன்படுத்தி இயக்கப்பட்ட தனியார் சொகுசு பேருந்து பறிமுதல்
அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி புகார்... அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு
ஆபரேசன் அகழி... புதுச்சேரியில் பதுங்கியிருந்த பிரபல ரௌடி பட்டறை சுரேஷ் கைது
கல்பாக்கத்தில் அதிவேகமாக சென்ற 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலி, 2 பேர் படுகாயகம்
கூவத்தை சீரமைக்க 'மாஸ்டர் பிளான்' வேண்டும் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Advertisement
Posted Sep 23, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரவுடி சீசிங் ராஜா.... சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்..? ஆம்ஸ்ட்ராங் வழக்கில் NO என அறிவிப்பு

Posted Sep 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி


Advertisement