செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மீன் விற்பனையில் மோதல்; பெட்ரோல் குண்டு வீச்சு, அரிவாள் வெட்டு.!

May 17, 2022 02:22:00 PM

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மீன் விற்ற பிரச்சினையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கடும் மோதலில் 5பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பள்ளபட்டி பகுதியைச் சேர்ந்த 3 பேர் நேற்று காலை கந்தப்பக்கோட்டையில் மினி வேனில் மீன் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

அப்போது ஏற்பட்ட பிரச்சனையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 2 இளைஞர்களை மீன் விற்பனையில் ஈடுபட்ட 3பேரும் சேர்ந்து கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில் தாக்குதலுக்கு ஆளான 2பேரின் ஊரில் இருந்து சென்றவர்கள் மீன் விற்பனை செய்த மினிவேனின் கண்ணாடியை அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த மீன் விற்பனை செய்த இளைஞர்கள் 30-க்கும் மேற்பட்ட கூலிப்படையினரை அழைத்துக் கொண்டு நள்ளிரவில் ஊருக்குள் புகுந்து அராஜகச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

பட்டாக்கத்தி,வாள், அரிவாள்,உருட்டுகட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் தெருத் தெருவாக சுற்றிய அவர்கள் மூன்றிற்கும் மேற்பட்ட வீடுகளை அடித்து நொறுக்கினர்.

மேலும் சாலையில் நிறுத்தியிருந்த கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்கிய அந்த கும்பல் தெருவில் நடந்து சென்ற சுமார் 5க்கும் மேற்பட்டவர்களை அரிவாளால் துரத்தி துரத்தி சரமாரியாக வெட்டியுள்ளது.

மேலும் பெட்ரோல் குண்டு வீசி 2 வீடுகளை சேதப்படுத்திய அந்த கும்பல் வீட்டில் இருந்த நபர்கள், கால்நடைகள் மீதும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்த தும் அப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்த வன்முறை கும்பலை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.


Advertisement
தஞ்சையில் குற்றச் சம்பவங்கள் குறித்து புகார் தெரிவிக்க செயலி அறிமுகம் - 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அறிமுகம்
பெண் சிசு கொலைக்கு ஆதரவாக இருப்பவர்களே பெண்கள் தான் : மதுரை ஆட்சியர்
சவாரிக்கு வந்த பெண்ணை கத்தியால் தாக்கி நகை பறித்த ஆட்டோ ஓட்டுநர்
நாகை காவல் நிலையத்தில் விஷம் குடித்த தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவர்
கோவையில் கோயில் உண்டியல்களை குறி வைத்து தொடர் திருட்டு... 5 பேரை கைது செய்த போலீசார்
திருச்சியில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த 12வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
குமாரப்பாளையம் அருகே லாரி பிரேக் பிடிக்காமல் மோதியதால் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்
மஹாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு எள், பிண்டம் வைத்து தர்ப்பணம்
ஈரோட்டில் மதுபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி வந்து லாரியின் மீது மோதி விபத்து
தமிழ்நாட்டில் இயல்பை விட கூடுதலாக 18 சதவீதம் தென்மேற்குப் பருவமழை பெய்ததாக தகவல்

Advertisement
Posted Oct 02, 2024 in உலகம்,Big Stories,

பகிரங்க மிரட்டல் விடுக்கும் ஈரான்.. பதிலடிக்கு தயாராகும் இஸ்ரேல்.. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம்..

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ஜாலி கொள்ளையன் பராக் மயக்க ஸ்பிரே அடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு..! 150 சிசிடிவி காமிரா மூலம் போலீஸ் ஆக் ஷன்

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வாழ வைக்கும் சென்னையில் இப்படியா ? பசிக்கொடுமை... வேகாத மீனைத் தின்று.. புலம்பெயர் தொழிலாளி பட்டினிச் சாவு..! இறந்த பின் நீண்ட உதவும் கரங்கள்

Posted Oct 01, 2024 in சென்னை,Big Stories,

நடிகர் திலகம் சிவாஜி காலத்தை வென்ற நடிப்புச் சுவடுகள்

Posted Oct 01, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நீங்க நம்பலேன்னாலும் இது தாங்க நெசம் தனியாக ஓடிய பைக்..! ஷாக் காட்சிகளின் பின்னணி


Advertisement