செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அல்ட்ரா டீலக்ஸ்சா.. அடை மழை டீலக்ஸ்சா.. அரசு பேருந்து சோகங்கள்..! பயணிகளின் பரிதாபம்.!

May 16, 2022 09:53:00 PM

அல்ட்ரா டீலக்ஸ் அரசு பேருந்து ஒன்றில் மழையால் கூரையிலிருந்து தண்ணீர் கொட்டியதால் இருக்கையில் அமர முடியாமல் ஆத்திரமடைந்த பயணிகள் நடுவழியில் பேருந்தை நிறுத்தி ஓட்டுனர் மற்றும் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூரில் இருந்து அல்ட்ரா டீலக்ஸ் என பெயரிடப்பட்ட பழைய அரசு பேருந்து ஒன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 7: 50 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டது. இந்த நிலையில் மழை காரணமாக பேருந்தில் பல பகுதிகளிலிருந்து இருக்கையில் அமர்ந்து கொண்டு இருந்த பயணிகள் மீது சாரலாக அடிக்க தொடங்கிய மழை, அருவி போல கொட்ட தொடங்கியதால் பயணிகள் நனைந்தனர்.

இதில் செய்வதறியாது தவித்த பயணிகள் ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.ஒரு கட்டத்தில் இருக்கைகளில் அமர முடியாத அளவுக்கு ஈரமானதால் வாணியம்பாடி நியூட்டன் பகுதியில் பேருந்தை நிறுத்தி பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாதாரண பேருந்தில் வேலூருக்கு 70 ரூபாய் கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில் அல்ட்ரா டீலக்ஸ் எனக்கூறி ஓட்டை உடைசலான இந்த பேருந்துக்கு ரூபாய் 95 ரூபாய் கட்டணம் பெறப்பட்ட நிலையிலும் வாணியம்பாடி வருவதற்கே 1.30 மணி நேரம் ஆனதாகவும், இதில் எப்போது வேலூருக்கு போவது என்றும், நாங்கள் எப்போது சென்னைக்கு போவது என்றும் பயணிகள் நொந்துபோயினர்.

மழையால் பேருந்தில் இருக்கையில் அமர முடியாமல் நனைந்தபடியே பேருந்திலிருந்து இறங்கி சாலையில் நின்ற நிலையில் மாற்று பேருந்து ஏற்பாடு செய்ய கூறி ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம், பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும், அல்ட்ரா டீலக்ஸ் எனக் கூறும் நிலையில், பேருந்தில் ஒரு இருக்கைகள் கூட சரியாக இல்லை எனவும், உடைந்து போய் இருக்கைகள் தொங்கும் நிலையில் கயிறு போட்டு கட்டி ஒட்டு வேலை பார்த்து இருப்பதாகவும், உதவாத பேருந்துக்கு அதிக கட்டணம் செலுத்தி தாங்கள் பயண நேரத்தில் அவதிக்குள்ளாகும் குமுறுகின்றனர் பயணிகள்

மாற்று பேருந்துக்காக வாணியம்பாடியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தும் பேருந்துகள் திருப்பத்தூர் பணிமனையில் இருந்து மாற்று பேருந்து வராததால் நடுவழியில் இரவு நேரத்தில் குழந்தை குட்டிகளுடன் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். பின்னர் இரவு 11 மணிக்கு மாற்று பேருந்து வரவழைக்கப்பட்டு பயணிகள் சென்னைக்கு அனுப்பப்பட்டனர்.

அல்ட்ரா டீலக்ஸ் அரசு பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.....

 

 


Advertisement
கோவை தனியார் நட்சத்திர ஓட்டலில் கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு 500 கிலோ கேக் தயாரிப்பு
தமிழகத்தில் புரட்டாசி மாத 3வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்
வேலூரில் ஆவணங்களை காண்பிக்க மறுத்து போலீஸாருடன் தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் வாக்கு வாதம்
தூத்துக்குடி மாவட்டம் நவதிருப்பதி கோவில்களுக்கு திருக்குடைகள் வழங்கும் விழா
ஓய்வுப் பெற்ற ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கியதாக கூட்டுறவு கடன் சங்கத்தில் பல கோடி மோசடி - 2 பேர் கைது
மீன்பிடி படகுகள் மீது மோதிய சரக்கு கப்பல்.. நடுக்கடலில் விழுந்த 13 மீனவர்களும் உயிர் தப்பினர்..!
சுற்றுலாப் பயணி தவற விட்ட தங்கச் சங்கிலியை கண்டெடுத்து ஒப்படைத்த 2 சிறுவர்களுக்கு வனத்துறையினர் பாராட்டு
ஊராட்சி வளர்ச்சித்திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டினர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
சிவகங்கை குன்றக்குடி கோவில் யானை சுப்புலட்சுமி தீ விபத்தில் இறந்த விவகாரத்தில் யானைப்பாகன் கைது
ராணிப்பேட்டையில் வேன் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தி 20 பேர் காயம்

Advertisement
Posted Oct 04, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

ரெக்கி ஆபரேஷனில் சிக்கிய ஆம்ஸ்ட்ராங்.. 4 ரவுடிகளின் 6 மாத பிளான்.. 4,892 பக்க குற்றப்பத்திரிகை... யானை சாய்க்கப்பட்டதன் திகில் பின்னணி...

Posted Oct 03, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அங்கன்வாடி மையத்தில் தப்பும் தவறுமாக தமிழ் ஆரம்பமே அமர்க்களமா..? என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை

Posted Oct 02, 2024 in உலகம்,Big Stories,

பகிரங்க மிரட்டல் விடுக்கும் ஈரான்.. பதிலடிக்கு தயாராகும் இஸ்ரேல்.. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம்..

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ஜாலி கொள்ளையன் பராக் மயக்க ஸ்பிரே அடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு..! 150 சிசிடிவி காமிரா மூலம் போலீஸ் ஆக் ஷன்

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வாழ வைக்கும் சென்னையில் இப்படியா ? பசிக்கொடுமை... வேகாத மீனைத் தின்று.. புலம்பெயர் தொழிலாளி பட்டினிச் சாவு..! இறந்த பின் நீண்ட உதவும் கரங்கள்


Advertisement