செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

திமுக பிரமுகர் உடலை எட்டு துண்டுகளாக வெட்டி இதயத்தை கடலில் வீசியது ஏன்? டம்மியை வீசி தலையை தேடும் போலீஸ்.!

May 16, 2022 07:22:45 AM

துப்பறிவாளன் படம் பாணியில் திமுக பிரமுகரை 8 துண்டுகளாக வெட்டிய கொலையாளிகள், இதயம் நுரையீரல் மற்றும் குடல் பாகங்களை காசிமேட்டு கடலில் வீசியதாக தெரிவித்து உள்ளனர். டம்மி போட்டு தலையை தேடும் போலீசின் புது டெக்னிக் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

சென்னை மணலியை சேர்ந்த திமுக பிரமுகர் சக்கரபாணி துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக காதலி தமீம்பானு, அவளது சகோதரர் வாஷிம் பாஷா, கூட்டாளியான ஆட்டோ ஓட்டுனர் டில்லி பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கொலையாளிகள் அளித்துள்ள வாக்குமூலம் போலீசாரை மிரள வைத்துள்ளது.

தமீம் பானுவுக்கு 22 வயதாகும் நிலையில் 60 வயதான சக்கரபாணி பைனான்ஸ் கொடுத்து தமீம்பானுவை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார்.

சக்கரபாணியுடனான தொடர்பை தவிர்ப்பதற்காக ஏரியாவிட்டு ஏரியா மாறிய நிலையிலும், அவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். புதிதாக குடியேறிய இடத்தில் கீழ் வீட்டில் வசித்து வந்த ஆட்டோ ஓட்டுனர் டில்லிபாபுவுடன், தமீம் பானுவுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.

அந்த வீட்டில் தமீம் பானு, தனது சகோதரர் வாசிம் உடன் சேர்ந்து பாத்தியா ஓதி மாந்த்ரீக வேலைகளை செய்து வந்துள்ளார்.

கொலை நடந்த அன்று இரவு வீட்டிற்கு வந்த கணவர் அஸ்லாம் உஜைனியிடமும் தனது இரு பெண் குழந்தைகளிடமும், பூட்டிய அறையில் இருந்த சக்கரபாணியின் சடலத்தை காண்பித்து அங்கிள் உடல் நலக்குறைவால் தூங்குகிறார். அவருக்கு ஓதி உள்ளதால் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறி அந்த அறையை பூட்டி வைத்ததாக தமிம் பானு கூறியுள்ளார்.

இதனையடுத்து மறு நாள் கடைக்கு சென்று பெரிய அளவிலான கசாப்பு கடை கத்திகள் இரண்டை வாங்கி வந்த வாசீம்பாஷா வீட்டை பூட்டி விட்டு குளியல் அறையில் வைத்து இருந்த, சக்கரபாணியின் சடலத்தில் இருந்து கழுத்தை கத்தியால் வெட்டியுள்ளான்.

பின்னர் உடலை இரண்டு துண்டாகவும் கால் பாதங்களை தனியாகவும் என மொத்தம் 8 துண்டுகளாக வெட்டி வைத்து அவற்றை தனி தனி பிளாஸ்டிக் பையில் அடைத்து வைத்திருந்துள்ளான்.

இந்த கொலை விவகாரம் குறித்து தமீம் பானுவின் புது காதலன் ஆட்டோ ஒட்டுனர் டில்லி பாபுவிடம் தெரிவித்து உதவி கேட்டுள்ளான். தமீம் மீது உள்ள காதலால் உதவி செய்ய முன் வந்த டில்லி பாபு, கடந்த 10 தேதி இரவு வாசீம்பாஷாவை தனது ஆட்டோவில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளான். அப்போது சக்ரபாணியின் தலையை போர்வையில் சுற்றி அடையார் ஆற்றில் வீசி உள்ளனர்

பின்னர் உடலில் இருந்து எடுக்கப்பட்ட இதயம் நுரையீரல் குடல் பகுதியை கவரில் அடைத்து வைத்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கல்லில்கட்டி கடலில் தூக்கி வீசியதாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதனையடுத்து கொலைக்கு பயன்படுத்திய இரண்டு பெரிய கத்தி மற்றும் ஒரு கத்திரி கோலை போலீசார் பறிமுதல் செய்து கைதான தமீம் பானு, வாசிம் பாஷா , டில்லி பாபு ஆகிய மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அடையாறு ஆற்றில் வீசப்பட்ட சக்ரபாணியின் தலையை மூன்றாவது நாளாக தீ அணைப்பு துறையினர் உதவியுடன் போலீசார் தீவிரமாக தேடியும் கிடைக்காத நிலையில் , 10 கிலோ எடையுள்ள மனித தலை போன்ற டம்மி ஒன்றை தயார் செய்து , கொலையாளிகள் வீசிய ஆற்றுக்குள் கயிறு கட்டி வீசி அது எந்த திசையை நோக்கி நகர்கிறது என்பதை வைத்து , சக்கரபாணியின் தலையை தேடி கண்டுபிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement
சென்னையில் நடைபெறுகிறது 'சைக்ளோத்தான் - 2024' போட்டி.. கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம்..
கடன்தொல்லை, காதல் தோல்வியால் இளைஞர் தற்கொலை..
தேனி அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர்மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
கோயம்புத்தூரில் மாணவர்கள் தங்கும் விடுதிகளில் காவல்துறை சோதனை
கோவை தனியார் நட்சத்திர ஓட்டலில் கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு 500 கிலோ கேக் தயாரிப்பு
தமிழகத்தில் புரட்டாசி மாத 3வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்
வேலூரில் ஆவணங்களை காண்பிக்க மறுத்து போலீஸாருடன் தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் வாக்கு வாதம்
தூத்துக்குடி மாவட்டம் நவதிருப்பதி கோவில்களுக்கு திருக்குடைகள் வழங்கும் விழா
ஓய்வுப் பெற்ற ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கியதாக கூட்டுறவு கடன் சங்கத்தில் பல கோடி மோசடி - 2 பேர் கைது
மீன்பிடி படகுகள் மீது மோதிய சரக்கு கப்பல்.. நடுக்கடலில் விழுந்த 13 மீனவர்களும் உயிர் தப்பினர்..!

Advertisement
Posted Oct 04, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

ரெக்கி ஆபரேஷனில் சிக்கிய ஆம்ஸ்ட்ராங்.. 4 ரவுடிகளின் 6 மாத பிளான்.. 4,892 பக்க குற்றப்பத்திரிகை... யானை சாய்க்கப்பட்டதன் திகில் பின்னணி...

Posted Oct 03, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அங்கன்வாடி மையத்தில் தப்பும் தவறுமாக தமிழ் ஆரம்பமே அமர்க்களமா..? என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை

Posted Oct 02, 2024 in உலகம்,Big Stories,

பகிரங்க மிரட்டல் விடுக்கும் ஈரான்.. பதிலடிக்கு தயாராகும் இஸ்ரேல்.. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம்..

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ஜாலி கொள்ளையன் பராக் மயக்க ஸ்பிரே அடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு..! 150 சிசிடிவி காமிரா மூலம் போலீஸ் ஆக் ஷன்

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வாழ வைக்கும் சென்னையில் இப்படியா ? பசிக்கொடுமை... வேகாத மீனைத் தின்று.. புலம்பெயர் தொழிலாளி பட்டினிச் சாவு..! இறந்த பின் நீண்ட உதவும் கரங்கள்


Advertisement