செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஒரே நாளில் ஒரே நபர் பெயரில் 2100 ஏக்கர் நிலம் பத்திரபதிவு.. பதிவு அலுவலர் சஸ்பெண்டு.. 2 ஊரையே தாரை வார்த்ததாக புகார்.!

May 14, 2022 07:49:39 AM

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 2 ஊர்களுக்கு உட்பட்ட 2100 ஏக்கர் நிலத்தை கோவையை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பெயருக்கு ஒரே நாளில் பத்திரபதிவு செய்து கொடுத்த பத்திர பதிவு அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

100 ஆண்டுகளுக்கு முன்பு வாரிசு இல்லாமல் மரணித்தவரின் நிலத்துக்கு திடீர் வாரிசாக முளைத்தவர்களின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு... 

தூத்துக்குடி மாவட்டம் தெற்கு சிலுக்கன் பட்டி, வடக்கு சிலுக்கன்பட்டி. செந்திலாம் பண்ணை போன்ற பகுதிகளைச் சேர்ந்த 500 விவசாயிகளுக்கு சொந்தமான 2,100 ஏக்கர் நிலத்தை கோவையை சேர்ந்த கிரீன் டெக் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் வைத்து சார்பதிவாளர் மோகன்தாஸ் சட்டவிரோதமாக பதிவு செய்து கொடுத்திருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்

பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான நிலத்தின் பட்டா, சிட்டா அடங்கல் மற்றும் பத்திரத்துடன் சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று சார்பதிவாளர் மோகன்தாசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தங்களுக்கு சொந்தமான நிலங்களை ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு தாரைவார்த்த விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை மீண்டும் தங்களுக்கு மறுபதிவு செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து 2,100 ஏக்கர் விவசாயிகள் நிலத்தை தனிநபருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்த புதுக்கோட்டை பத்திரப்பதிவு அலுவலக சார் பதிவாளர் மோகன்தாசை தற்காலிக பணிநீக்கம் செய்து துணை பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டார்.

மேலும், முறைகேடு குறித்து மாவட்டப் பதிவாளர் பால்பாண்டி விசாரணை செய்து அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அதுவரை ஏரல் சார்பதிவாளர் வள்ளியம்மாள் கூடுதல் பொறுப்பாக புதுக்கோட்டை சார்பதிவாளராக பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 2100 ஏக்கர் நிலமும் 87 வயதான செந்தில் ஆறுமுகம் என்பவரின் 4 தலைமுறைக்கு முந்தையவரான நெல்லைநாயகம் என்பவருக்கு சொந்தமானது என்றும் வாரிசு இல்லாத அவருக்கு பின்னர் அவரது மனைவியின் உறவினர்கள் அவர்களது வாரிசுகள் என இந்த சொத்துக்களை அனுபவித்து வந்ததாகவும்,

காலப்போக்கில் பராமரிக்க ஆள் இல்லாமல் விடப்பட்ட அந்த சொத்துக்களில் இரு கிராமங்கள் உருவாகிப் போனதாகவும், செந்தில் ஆறுமுகம் உச்ச நீதிமன்றம் வரை சென்று தனது குடும்ப சொத்துக்களை மீட்டு உத்தரவு பெற்று வந்துள்ளதாக தெரிவித்த மோகன் தாஸ், அந்த தீர்ப்பின் அடிப்படையில் செந்தில் ஆறுமுகத்தால் பவர் வழங்கப்பட்ட கோவையை சேர்ந்த ஆதித்யா கிரீன் டெக் என்ற தனியார் நிறுவனத்துக்கு 2100 ஏக்கர் நிலங்களையும் மொத்தமாக பத்திரபதிவு செய்து கொடுத்ததாக விளக்கம் அளித்துள்ளார்.

அதற்கு ஆதாரமான சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு நகல் எங்கே என்று கேட்ட போது சில தினங்களில் கைக்கு வந்து விடும் என்று கூறி சமாளித்தார் மோகன் தாஸ்.

இரு கிராமங்களை முழுமையாக உள்ளடக்கிய இந்த நிலத்தை ஒரே நாளில் ஒரே நபரின் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொடுப்பதற்கு, 32 வயது சார்பதிவாளரான மோகன் தாஸ் ஒன்றரை கோடிரூபாய் வரை கையூட்டாக பெற்றுக் கொண்டதாக விவசாயிகள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

இந்த சம்பவத்தை பொறுத்தவரை 87 வயது செந்தில் ஆறுமுகம் , அவருடன் வந்திருந்த நபர்கள், கோவை ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைவரின் பின்னணியையும், காவல்துறையினர் விரிவான விசாரணை நடத்தி கண்டறிய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.


Advertisement
ஆசையாக அழைத்த மனைவி... கணவனுக்கு காத்திருந்த ஷாக் சடலத்துடன் ஆட்டோ சவாரி..! ராஜதந்திரங்கள் வீணானது எப்படி ?
வாழ்ந்தால் உன்னோடு மட்டுந்தான் வாழுவேன்.. காதலிக்காக உயிர் தியாகம்..! 2k கிட்ஸின் சீரியஸ் காதல் சோகம்
ஈச்சர் வாகனத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.16 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்
"திமுகவின் பெயர், கொடி ,சின்னம் மாறவில்லை, எதிரிகளின் வடிவம் மாறியிருக்கலாம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் நடைபெறுகிறது 'சைக்ளோத்தான் - 2024' போட்டி.. கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம்..
கடன்தொல்லை, காதல் தோல்வியால் இளைஞர் தற்கொலை..
தேனி அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர்மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
கோயம்புத்தூரில் மாணவர்கள் தங்கும் விடுதிகளில் காவல்துறை சோதனை
கோவை தனியார் நட்சத்திர ஓட்டலில் கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு 500 கிலோ கேக் தயாரிப்பு
தமிழகத்தில் புரட்டாசி மாத 3வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்

Advertisement
Posted Oct 06, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஆசையாக அழைத்த மனைவி... கணவனுக்கு காத்திருந்த ஷாக் சடலத்துடன் ஆட்டோ சவாரி..! ராஜதந்திரங்கள் வீணானது எப்படி ?

Posted Oct 06, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வாழ்ந்தால் உன்னோடு மட்டுந்தான் வாழுவேன்.. காதலிக்காக உயிர் தியாகம்..! 2k கிட்ஸின் சீரியஸ் காதல் சோகம்

Posted Oct 04, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

ரெக்கி ஆபரேஷனில் சிக்கிய ஆம்ஸ்ட்ராங்.. 4 ரவுடிகளின் 6 மாத பிளான்.. 4,892 பக்க குற்றப்பத்திரிகை... யானை சாய்க்கப்பட்டதன் திகில் பின்னணி...

Posted Oct 03, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அங்கன்வாடி மையத்தில் தப்பும் தவறுமாக தமிழ் ஆரம்பமே அமர்க்களமா..? என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை

Posted Oct 02, 2024 in உலகம்,Big Stories,

பகிரங்க மிரட்டல் விடுக்கும் ஈரான்.. பதிலடிக்கு தயாராகும் இஸ்ரேல்.. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம்..


Advertisement