செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஏய் தள்ளு.. தள்ளு.. தள்ளு.. தள்ளுமாடல் பேருந்து.. டயர்டான பயணிகள்.. அண்ணே பேரீச்சம்பழம்…!

May 12, 2022 08:31:57 AM

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில்  நடு சாலையில் பழுதாகி நின்று போன அரசு பேருந்து ஒன்றை, பயணிகள் ஒன்று சேர்ந்து அரைமணி நேரமாக தள்ளிப்பார்த்தும் பேருந்து ஸ்டார்ட் ஆகாததால் நொந்து போன சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூரிலிருந்து ராசிபுரம் நோக்கி அரசு பேருந்து ஒன்று 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பேருந்து நாமகிரிபேட்டை சாலையில் வந்த போது நடுசாலையில் பேருந்து பழுதாகி நின்றது.

செய்வதறியாது திகைத்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர், பேருந்தை லைட்டா தள்ளினா இயங்க ஆரம்பித்து விடும் என்று சொல்ல, அதனை நம்பி வேகாத வெயிலில் சாலையில் இறங்கிய பயணிகள் பேருந்தை தள்ள தொடங்கினர்.

பேருந்து ஸ்டார்ட் ஆக ஆரம்பித்ததும் தள்ளுவதை நிறுத்தினர், பயணிகள் தள்ளுவதை நிறுத்தியதும் பேருந்தும் அங்கேயே நின்று விட்டது. இதனால் மீண்டும் தள்ளு படலம் ஆரம்பித்தது.

பேருந்துக்கு பின்னால் நின்று இளைஞர் சிலர் உயிரை கொடுத்து தள்ளிக்கொண்டிருக்க , சில கவுரவ பயணிகள் பெயருக்கு பேருந்தின் பக்கவாட்டில் நின்று கொண்டு தங்கள் கையை பேருந்தில் பட்டும் படாமலும் வைத்து தள்ளுவது போல பாவனை செய்தனர். தள்ளியும் பேருந்து ஸ்டார் ஆகாததால் விரக்தியுடன் பேருந்தை பார்த்தனர்.

ஒரு கட்டத்தில் தள்ளுரோமா இல்லையோ கூட்டத்தோடு சேர்ந்து நடந்தாவது போவோம் என்பது போல சில பயணிகள் பேருந்துடன் நடக்க ஆரம்பித்தனர். இன்னும் சிலர் இது வேலைக்காது என்று முடிவு செய்து அந்த பேருந்தை தள்ளி சாலையோரமாக கொண்டு நிறுத்தி விட்டு நடந்தே செல்ல ஆரம்பித்தனர். 

அரைமணி நேரமாக நடந்த இந்த தள்ளு வண்டி விளையாட்டை வேடிக்கைப் பார்த்த பலரும் சுற்றிவளைத்து வீடியோ எடுத்த நிலையில் நீண்ட நேரத்திற்கு பின்னர் அந்த பேருந்து பழுது நீக்கி பேருந்து நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.


Advertisement
மழை நீருடன் வீடுகளை சுற்றி தேங்கிய சாக்கடை தண்ணீர்.. பூச்சிகள் வருவதாகவும், நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் புகார்..!
வான்படை சாகசம் சாதனையாக மாறாமல் வேதனையாக மாறிவிட்டது - ஆதவ் அர்ஜுன் விமர்சனம்
பணியிலிருந்தபோது உயிரிழந்த போக்குவரத்து தலைமைக் காவலர்.. 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம்..!
டிராக்டர் "ரொடேட்டரில்" சிக்கி 11 வயது சிறுமி உயிரிழப்பு.. டிராக்டர் மீது ஏற ரொடேட்டரில் கால் வைத்தபோது விபத்து
"காமராஜரை ஆட்சியில் இருந்து இறக்கியது தமிழர்கள் செய்த வரலாற்றுப் பிழை" - செல்வப் பெருந்தகை
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இளைஞரைக் கடத்திய கும்பல்.. விரட்டிச் சென்று மீட்ட போலீசார்..!
பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு எப்போது? பிரதமர் பங்கேற்பு என தகவல்..!
டிராக்டருக்கான தவணைப் பணத்துடன் தலைமறைவான ஊழியர்… விவசாயி அளித்த புகாரில் ஜான் டீர் நிறுவன மேலாளர் மீது வழக்குப்பதிவு..
தேசிய அளவிலான கோ-கோ போட்டி 12 மாநிலங்களைச் சேர்ந்த கோ-கோ அணிகள் பங்கேற்பு..
தேவாலயத்தின் இடத்தை ஆக்கிரமித்ததாக சிலர் மீது தாக்குதல்.. பாதிக்கப்பட்டவர்கள் புகாரின் பேரில் போலீஸார் விசாரணை..

Advertisement
Posted Oct 07, 2024 in செய்திகள்,சென்னை,Big Stories,

வான்சாகசம் காண வந்து குடிநீர் கிடைக்காமல் உயிரை விட்ட 5 பேர்..! யார் பொறுப்பு? மக்கள் ஆதங்கம்

Posted Oct 07, 2024 in செய்திகள்,சென்னை,Big Stories,

சென்னையின் வான்பரப்பை அதிர விட்ட விமானப்படை... வீரர்களின் தீரத்தை எடுத்துரைத்த சாகசங்களின் தொகுப்பு..!

Posted Oct 06, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஆசையாக அழைத்த மனைவி... கணவனுக்கு காத்திருந்த ஷாக் சடலத்துடன் ஆட்டோ சவாரி..! ராஜதந்திரங்கள் வீணானது எப்படி ?

Posted Oct 06, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வாழ்ந்தால் உன்னோடு மட்டுந்தான் வாழுவேன்.. காதலிக்காக உயிர் தியாகம்..! 2k கிட்ஸின் சீரியஸ் காதல் சோகம்

Posted Oct 04, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

ரெக்கி ஆபரேஷனில் சிக்கிய ஆம்ஸ்ட்ராங்.. 4 ரவுடிகளின் 6 மாத பிளான்.. 4,892 பக்க குற்றப்பத்திரிகை... யானை சாய்க்கப்பட்டதன் திகில் பின்னணி...


Advertisement