செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

இருட்டில் வந்த ராசாத்தி.. Ex அமைச்சர் வீட்டில் 53 சவரன் அம்போ..!

May 10, 2022 09:49:29 PM

முன்னாள் அமைச்சர் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து 53 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையன், நகைகளை விற்க சென்ற போது நாகர் கோவில் போலீசாரிடம் சிக்கினான். பூட்டிய வீட்டிற்குள் நள்ளிரவில் ரகசியமாக நுழைந்த ராசாத்தி பட்டபகலில் பகிரங்கமாக சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

கேரளாவில் புரட்சிகர சோசலிஸ்டு கட்சியின் தலைவராக இருந்தவர் பேபிஜான் , இரு முறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர். இவரது மனைவி அன்னம்மா. இவர்களுக்கு சொந்தமான வீடு கொல்லம் உபாசனா நகரில் உள்ளது. கணவர் பேபிஜான் மறைவிற்கு பின்னர் அன்னம்மா மட்டும் அந்த வீட்டில் வசித்து வருகின்றார்.

பேபிஜானின் மகன்ஷிபு பேபிஜான், இவர்,காங்கிரஸ் முதல் அமைச்சர் உம்மன் சாண்டியின் அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர். இவர் தனது பூர்வீக வீட்டிற்கு அருகிலேயே புதிதாக வீடு ஒன்றை கட்டி அங்கு குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கணவர் பேபிஜான் இறந்த நாளில் இருந்து, பகல் நேரத்தில் மட்டுமே பூர்வீக வீட்டில் வசிக்கும் அன்னம்மா, இருட்ட தொடங்கியதும் அந்த வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள தனது மகனின் புது வீட்டிற்கு சென்று விடுவது வழக்கம் என்று கூறப்படுகின்றது.

இந்த நிலையில் சம்பவத்தன்று காலையில் பூர்வீக வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அன்னம்மா வீட்டிற்குள் சென்று பார்த்த போது, முதல் மாடியில் இருந்த பீரோவில் வைத்திருந்த 53 சவரன் நகைகளை கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக வீட்டிற்கு வந்த ஷிபு பேபிஜான், போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

விரைந்து வந்த போலீசார் மோப்ப நாய்கள் உதவியுடனும், அங்கு கைப்பற்றைப்பட்ட கைரேகைகளை கொண்டும் கொள்ளையனை தேடி வந்தனர். கேரள எல்லை பகுதி மற்றும் தமிழக பகுதிகளில் உள்ள காவல்துறையினருக்கும் இந்த கொள்ளை தொடர்பாக போலீசார் தகவல் அளித்தனர்.

இதற்க்கிடையே நாகர்கோவிலில் உள்ள நகை அடகுகடை ஒன்றிற்கு ஏராளமான நகைகளுடன் சந்தேகத்துக்கிடமான ஆசாமி ஒருவன் சென்றுள்ளான். தனது பெற்றோரின் நகைகளை விற்க வந்திருப்பதாக கூறியதால் , நகை அடகு கடை உரிமையாளர் , காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். நாகர்கோவில் போலீசார் விரைந்து வந்து அந்த நபரை பிடித்து விசாரித்த போது அவனது பையில் மொத்தமாக 53 சவரன் நகைகள் இருந்தது. அவர் நாகர்கோவில் , மணிக்கட்டி பொட்டல் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்கிற ராசாத்தி ரமேஷ் என்பதும் , முன்னாள் அமைச்சர் பேபி ஜான் வீட்டில் கொள்ளையடித்தவன் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து கொல்லம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ராசாத்தி ரமேஷையும் , கைப்பற்றப்பட்ட மொத்த நகைகளையும் நாகர்கோவில் போலீசார் அவர்களிடம் ஒப்படைத்தனர் . ஏற்கனவே பாலக்காட்டில் ஒரு வீட்டில் கொள்ளையில் ஈடுபட்டு அங்குள்ள போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த நிலையில், இரவு நேரத்தில் பூட்டப்பட்டு கிடக்கும் பேபிஜானின் வீட்டை நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

ஒரு பகுதியில் கொள்ளையடிக்கச்சென்றால் பெண் போல பேச்சுக் கொடுத்து குடும்ப விவரங்களை எல்லாம் தெரிந்து கொண்டு தான் நோட்டமிட்ட வீட்டில் கைவரிசை காட்டுவதில் அவன் கில்லாடி என்பதால் போலீசார் கொள்ளையன் ரமேஷை ராசாத்தி ரமேஷ் என்று அழைக்கின்றனர்.


Advertisement
செங்கல்பட்டில் சாதிச் சான்றிதழுக்காக அலைக்கழிக்கப்படுவதால் ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்
சிவகங்கையில் கைது செய்யப்பட்டவரின் காலை உடைத்ததாக புகார் - எஸ்.ஐ பணியிட மாற்றம்
ஈரோட்டில் தடகள வீராங்கனையை பின்தொடர்ந்து சென்று செல்போனை பறித்த 3 பேர் கைது
திருச்சியில் சிறுவன் மீது புல்லட் பைக்கை ஏற்றிய சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன்
திருவாரூரில் தம்பியின் இறுதிச்சடங்கில் அக்காள் உயிரிழப்பு 6 பேர் காயம்
கடலூரில் போலி மருத்துவ சான்றிதழ்கள் வழங்கிய வழக்கில் இந்திய சித்த மருத்துவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கைது
அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் டெக்னீஷியன்களை நியமிக்க உத்தரவு: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு
பாதுகாப்பு கருதி மழைக்கு முன்னதாக பக்கிங்காம் கால்வாயில் கட்டப்பட்ட தடுப்பணை ஷட்டர்கள் உடைப்பு
திருநெல்வேலியில் நீர்நிலையில் கட்டடம் கட்டி நிதியை வீணடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு
அரசுப் பெண்கள் பள்ளி மாணவிகள் வளைகாப்பு ரீல்ஸ்... வகுப்பு ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம்

Advertisement
Posted Sep 23, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரவுடி சீசிங் ராஜா.... சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்..? ஆம்ஸ்ட்ராங் வழக்கில் NO என அறிவிப்பு

Posted Sep 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி


Advertisement