செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

தூத்துக்குடியில் குடும்பத்தினருக்குத் தெரியாமல் 2-வது திருமணம் செய்துகொண்ட மகளை அவமானம் தாங்காமல் வெட்டிக் கொன்ற பெற்ற தந்தை.!

May 07, 2022 07:15:33 PM

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே குடும்பத்தினருக்குத் தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட மகளை, அவமானம் தாங்காமல் பெற்ற தந்தையே வெட்டிக் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தாதன்குளத்தைச் சேர்ந்த சுடலைமுத்து என்பவர் தனது மகள் மீனாவை 17 வயதிலேயே இசக்கிப்பாண்டியன் என்பவருக்குத் திருமணம் செய்துகொடுத்துள்ளார். இசக்கிப்பாண்டியன் - மீனா தம்பதிக்கு 4 வயதில் மகன் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வேறொரு இளைஞரை குடும்பத்தினருக்குத் தெரியாமல் மீனா இரண்டாவது திருமணம் செய்துள்ளார். மகளின் இந்த செயலால் பெருத்த அவமானமாக உணர்ந்த சுடலை முத்து, அவர் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

10 மாத காலம் கழிந்த நிலையில், உறவினரைப் பார்க்க ஊருக்குச் சென்றுள்ளார் மீனா. தகவலறிந்து மீனாவின் தந்தை உட்பட உறவினர்கள் சூழ்ந்துகொண்டு அவரை திட்டித் தீர்த்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சுடலைமுத்து, மறைத்து வைத்திருந்த அரிவாளைக் கொண்டு மகளை சரமாரியாக வெட்டிக் கொன்றுள்ளார். மகளைக் கொன்றுவிட்டு தலைமறைவான சுடலைமுத்துவை போலீசார் தேடி வருகின்றனர்.

 

 

 


Advertisement
13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
2 பிக்கப் வேன்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. 2 பேர் உயிரிழப்பு
பள்ளி விடுமுறையை முன்னிட்டு ஆற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்ற 11 ஆம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த சோகம்
டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு.. போலீஸ் நிலையத்தை சூறையாடிய மக்கள்
வீலிங் வீடியோ வெளியிட்ட இளைஞரின் பைக் பறிமுதல்.. இன்ஸ்டா நேயர் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக விபரீதத்தில் சிக்கிய இளைஞர்
தலையை சிதைத்து இளைஞர் படுகொலை.. தி.மு.க பிரமுகர் கொலைக்கு பழிக்குப்பழியா..?
இந்தியா என்பது ஒரு நிர்வாக கட்டமைப்பு மட்டுமே "மாநிலங்களை தனித்தனியாக பார்க்காமல் ஒரே நாடாக கருத வேண்டும்" - ஆளுநர் ஆர்.என்.ரவி
ஊழல் வழக்கில் சிறை சென்றவர் தியாகியா..? செந்தில்பாலாஜி காவல் நிலையத்தில் எப்படி கையெழுத்திடுவார்..? - இ.பி.எஸ் கேள்வி
ஒரே நாளில் 3 சிறுவர்களைக் கடித்துக் குதறிய தெரு நாய்கள்
கோவையின் அடையாளமாகத் திகழ்ந்தவர் பத்மஸ்ரீ பாப்பம்மாள்: வானதி

Advertisement
Posted Sep 29, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

தூக்குப்பா.. தூக்கிப் போடுங்க.. இப்படி ஒரு ஆபீசர் தான் வேணும்.. நடைபாதை நடக்குறதுக்கு தானே ?.. போலீசார் அதிரடி காட்டிய காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்டெய்னருக்குள் க்ரெட்டா கார் பணத்துடன் தப்பிய கொள்ளை கும்பல் கொக்கி கொள்ளையன் சுட்டுக் கொலை..! பட்டப்பகலில் பர பர சேசிங் காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஏ.டி.எம் கொள்ளையர்களுடன் சென்ற கண்டெய்னர்.. தீரன் பட பாணியில் தப்ப முயன்ற கும்பல்... போலீஸ் என்கவுன்டரில் ஒருவன் பலி, 5 பேர் கைது

Posted Sep 28, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

மழை நீர் மேலே.. தார்ச்சாலை என்ன ஒரு புத்திசாலி தனம்.. உத்தரவுக்கு கீழ்படிகிறார்களாம்..! தரமற்ற சாலைப் பணிக்கு மக்கள் எதிர்ப்பு

Posted Sep 27, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நான் ஆம்பளடா.. அடாவடி ஆட்டோ ஓட்டுனரை பிடித்து அடக்கிய அந்த இரு பெண்கள் ..! போக்குவரத்து ஊழியர்களுக்கு அடி உதை


Advertisement