செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

நன்கொடை கேட்டு பேக்கரியில் அத்துமீறிய சிறுத்தையன்ஸ் கைது... 20 ரூபாய் கொடுத்ததால் அடங்க மறுத்தனர்

May 07, 2022 07:24:00 AM

திருவாரூர் மாவட்டம் குடவாசல் கடைவீதியில் கட்சி நிதி குறைவாக கொடுத்ததால் பேக்கரியில் ரகளையில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி  நிர்வாகிகள் இருவரை போலீசார் கைது செய்தனர் 

திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் உள்ள கடை தெருவில் ஜெயச்சந்திரன் என்பவர் பேக்கரி நடத்தி வந்தார். இவரது கடைக்கு அரசியல் கட்சியினர் அவ்வப்போது வந்து நன்கொடைக்காக கையேந்துவதும்.. விருப்பப்பட்டால் அவர்களுக்கு இவர் பணம் கொடுப்பதும் வழக்கமாக இருந்துள்ளது.

சம்பவத்தன்று விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த நகர செயலாளர் பால்கிட்டு, மஞ்சக்குடி செந்தில் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் அந்த கடைக்கு வந்து இனிப்பு வாங்கி கொண்டு, துண்டுப்பிரசுரத்தை வழங்கி கட்சி வளர்ச்சி நிதிக்காக பணம் கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.

அங்கிருந்த கடையின் பணியாளர் முதலாளி வந்தவுடன் வாங்கி கொள்ளவும் என கூறியுள்ளார். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் மற்றும் கட்சியினர் உடனே பணம் வேண்டும் என வற்புறுத்தி கேட்டதால், கடை பணியாளர் போனால் போகட்டும் என்று 20 ரூபாயை எடுத்து கொடுத்ததாக கூறப்படுகின்றது.

தங்களை அந்த கடைபணியாளர் அவமதித்து விட்டதாக கூறி ஆவேசமான சிறுத்தைகள் கடை ஊழியர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதுடன், கடையில் இருந்த பொருட்களை கீழே தள்ளி விட்டு ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது

சிறுத்தைகளின் மாமூல் அத்துமீறல் குறித்து தகவல் அறிந்த குடவாசல் பகுதி வணிகர்கள் அனைவரும் , அவர்கள் மீது நடவடிக்கை எக்க கோரி அனைத்து கடைகளையும் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக இருவரையும் கைது செய்ய வேண்டும் இல்லை என்றால் தங்களுடைய போராட்டம் தொடரும் எனவும் அறிவித்தனர்.

இந்த நிலையில் கடை உரிமையாளர் சிசிடிவி ஆதாரத்துடன் காவல்துறையில் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசிக நகர செயலாளர் பால்கிட்டு, மஞ்சக்குடி செந்தில்குமார் ஆகியோரை குடவாசல் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் இருவரையும் விசாரணைக்கு பின்னர் திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பணம் கேட்டு பன் கடையில் பைட் செய்த சிறுத்தைகள், போலீஸ் நடவடிக்கையில் சிக்கி தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.


Advertisement
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் 100 அடி நீளம் வரை உடைந்து விழுந்த நடைமேடை
கோயம்புத்தூர் சூலூர் அருகே பி.ஏ.பி வாய்க்காலில் டிராக்டர் கவிழ்ந்து விபத்தில் இருவர் உயிரிழப்பு
திருப்பூர் அருகே புகையிலை கேட்டு தர மறுத்த இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது
திருப்பூரில் பட்டாசு தயாரிக்கும்போது நிகழ்ந்த விபத்தில் குழந்தை உள்பட 3 பலியான சம்பவத்தில் 2 கைது
திருச்சூர் அருகே வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து வீட்டுச் சுவரில் மோதி விபத்து
பள்ளிக்கு சைக்கிளில் சென்ற 7 ஆம் வகுப்பு மாணவர் கால்வாயில் விழுந்து பலி..! ஆற்றில் இருந்து சடலம் மீட்பு
கன்னியாகுமரி மதுபோதையில் பாடம் நடத்திய தமிழ் ஆசிரியர் பணியிடை நீக்கம்
திருப்பூரில் சட்டவிரோதமாக நாட்டு வெடிகளை தயாரித்தபோது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
லஞ்ச ஒழிப்பு ஆய்வாளருக்கே ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுக்க முயன்ற மோட்டார் வாகன ஆய்வாளர் கைது
தமிழகம் முழுவதும் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் மனித சங்கிலி போராட்டம்

Advertisement
Posted Oct 09, 2024 in தமிழ்நாடு,Big Stories,

பள்ளிக்கு சைக்கிளில் சென்ற 7 ஆம் வகுப்பு மாணவர் கால்வாயில் விழுந்து பலி..! ஆற்றில் இருந்து சடலம் மீட்பு

Posted Oct 09, 2024 in சென்னை,Big Stories,

fake ப்ரியாவை நம்பி ஏமாந்த அந்த 200 பேர் ரூ 2,00,000 போச்சிப்பா..! என்னம்மா.. இப்படி பன்றீங்களேம்மா...

Posted Oct 09, 2024 in இந்தியா,Big Stories,

ஜம்மு-காஷ்மீரில் கூட்டணி ஆட்சி பள்ளத்தாக்கில் சரிந்த காங்கிரஸ் 2வது பெரிய கட்சியான பா.ஜ.க காஷ்மீர் ஆப்பிளை ருசிக்கத் தவறிய காங்கிரஸ் ஜம்முவில் மீண்டும் சாதித்த பா.ஜ.க

Posted Oct 08, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

விவாகரத்து கேட்ட மனைவி கொன்று புதைத்த கணவன் நிர்க்கதியான பெண் குழந்தைகள்!

Posted Oct 08, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

“மன்மதன்” சிம்புவுக்கே டஃப் கொடுத்த கேடி லேடி “பவுடர் ஜமீமா”..! வசதியான பசங்கன்னா “கிட்னாப்”..!


Advertisement