தமிழ்நாட்டில் உள்ள மனித நேயம் நாடு முழுவதற்குமான மாதிரியாக உருவாக்கி உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூரில் ரமலான் பெருவிழா நலத்திட்ட உதவிகளை வழங்கியபின் பேசிய முதலமைச்சர், எல்லாருக்கும் எல்லாம் சென்று சேர வேண்டும் என்பதே திமுகவின் கொள்கை மற்றும் லட்சியம் என குறிப்பிட்டார்.