நாமக்கல் அருகே 4,000 லிட்டர் கலப்பட டீசலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
வள்ளிபுரத்தில் கேட்பாரற்று நின்ற மினி டேங்கர் லாரியை அவர்கள் சோதனையிட்ட போது, அதில் 4,000 லிட்டர் கலப்பட டீசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அதன் உரிமையாளர் மோகனைத் தேடி வருகின்றனர்.