செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

தஞ்சை அருகே தேர்த் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் பலி

Apr 27, 2022 07:47:45 AM

தஞ்சை அருகே தேர்த் திருவிழாவின்போது, உயர் அழுத்த மின்கம்பியில் உரசியதால் தேர் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் 11பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தஞ்சை அருகே களிமேடு அப்பர் கோயிலில் 94வது ஆண்டு அப்பர் குருபூஜை நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு இந்த கோவிலில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை வரை தேரோட்டம் நடைபெறுவது வழக்கமாகும்.

நள்ளிரவில் தொடங்கிய தேரோட்ட நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம்பிடித்து இழுத்தனர். இன்று அதிகாலையில் தஞ்சை-பூதலூர் சாலையில் தேர் வந்த போது, வளைவு ஒன்றில் திரும்புகையில், அங்கிருந்த மின்விளக்கு மீது தேர் உரசியது. அப்போது உயர் அழுத்த மின்கம்பி தேரின் மீது உரசியதால் மரத்தினால் செய்யப்பட்ட அந்த தேர் தீப்பிடித்து எரிந்தது.

இதனைக் கண்டு அருகில் இருந்தவர்கள் அச்சத்துடன் சிதறி ஓடினர். இந்த விபத்தில் ஜெனரேட்டரை இயக்க வந்திருந்த நபர் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்தார். ஊர்வலத்தில் வந்தவர்களில் 2 சிறுவர்கள் உள்பட 10பேர் தீயில் எரிந்தும், உடல் கருகியும், மின்சாரம் பாய்ந்தும் உயிரிழந்தனர்.

விபத்தில் காயம் அடைந்த 4 பேரைஅங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களுக்கு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று அவர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.


Advertisement
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement