செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வாக்கிங் சென்ற ஓட்டல் உரிமையாளர் காரில் கடத்தல்.. போலீசில் சிக்கிய பின்னணி.!

Apr 26, 2022 09:28:20 AM

வத்தலகுண்டு அருகே நடைப்பயிற்சிக்கு சென்ற ஓட்டல் உரிமையாளரை காரில் கடத்திச்சென்ற சம்பவம் தொடர்பாக 7 பேர் பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர்..

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே கெங்குவார்பட்டியைச் சேர்ந்தவர் அன்புசெல்வம் இவருக்கும், சென்னையில் வசிக்கும், இவரது சகோதரர் அருள்நாயகம் என்பவருக்கும் இடையே, சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. குறிப்பாக வத்தலக்குண்டு பெரியகுளம் சாலையில் உள்ள 3 நட்சத்திர ஓட்டல் நடத்துவதில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை அன்புசெல்வம் வத்தலக்குண்டு - பெரியகுளம் பைபாஸ் சாலையில் நடைபயிற்சி சென்றபோது, ஒரு காரில் வந்து வழிமறித்த 7 பேர் கொண்ட கும்பல், கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி அன்புசெல்வத்தை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அன்புசெல்வத்தின் மகன் கிஷோர் , வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த வத்தலகுண்டு போலீசார் தனிப்படை அமைத்து கடத்தல் கும்பலை தேடி வந்தனர்.
சம்பவ இடத்தில் காணப்பட்ட செல்போன் டவர் சிக்னலை வைத்து, கடத்தப்பட்டவர்கள் விருதுநகர் அருகே மெய்குன்றம் என்ற இடத்தில் இருப்பதை கண்டறிந்து, அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார், 7 பேர் கொண்ட கடத்தல் கும்பலை கைது செய்து ஓட்டல் உரிமையாளர் அன்புசெல்வத்தை பத்திரமாக மீட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட, வத்தலகுண்டு வெள்ளைச்சாமி, விருதுநகர் பிரபாகரன், விஜய் மதுரை பழங்காநத்தம் பாலமுருகன், பேரையூர் திமுக இளைஞரணி செயலாளர் வடிவேல் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து அரிவாள், கத்தி மற்றும் கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அருள் நாயகத்தின் தூண்டுதலினால் இந்த கடத்தல் சம்பவம் நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர்.


Advertisement
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement