செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

துணைவேந்தரை அரசு நியமிக்க முடிவு.. பேரவையில் மசோதா நிறைவேறியது..!

Apr 25, 2022 05:46:12 PM

தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை மாநில அரசே நியமிக்க வழிவகை செய்யும் புதிய சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது.

தமிழகத்திலுள்ள மாநில பல்கலைக்கழகங்களில், மாநில அரசே துணைவேந்தரை நியமிக்க ஏதுவாக பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் சட்ட முன்வடிவை சட்டப்பேரவையில்  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து மசோதா குறித்து விளக்கமளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில அரசுக்கு கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கக் கூடிய அதிகாரம் அரசுக்கு இல்லாமல் இருப்பது உயர்கல்வியில் பெரும் தாக்கத்தையும், குளறுபடிகளையும் ஏற்படுத்துவதாக கூறினார்.

கடந்த 4 ஆண்டுகளில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் தனக்கு மட்டுமே பிரத்யேக உரிமை இருக்கிறது போல் அரசை மதிக்காமல் செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். 

மேலும், குஜராத், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தேர்வு குழு பரிந்துரைத்த மூன்று பேரில் ஒருவரை மாநில அரசு தான் துணைவேந்தராக நியமிக்கிறது எனவும், அதேபோல கர்நாடகாவில் மாநில அரசின் ஒப்புதலுடன் தான் துணைவேந்தர் நியமிக்கப்படுவதாகவும்முதலமைச்சர் குறிப்பிட்டார். 

இந்த நிலையில், துணைவேந்தர் நியமனம் தொடர்பான மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக கூறி அதிமுகவும், பா.ஜ.க.வும் வெளிநடப்பு செய்த நிலையில், குரல்வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை இதுநாள் வரையில் ஆளுநரே நியமித்து வரும் நிலையில், அந்த அதிகாரத்தை அரசுக்கு மாற்றும் சட்ட மசோதாவை நிறைவேற்றி அதை ஆளுநரின் ஒப்புதலுக்கே தமிழக அரசு அனுப்பி வைக்கவுள்ளது. 

 


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement