செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

தாயை பழித்தவனுக்காக கத்தியை எடுத்தவரின் தலையை அறுத்த கூட்டாளிகள்.. பிஞ்சில் பழுத்த கஞ்சா குடிக்கிகள்

Apr 21, 2022 07:24:14 AM

தாயை பழித்து பேசிய கூட்டாளிகளிடம் கத்தியை காட்டிய எச்சரித்தவரை, தனியாக அழைத்துச்சென்று தலையை துண்டாக அறுத்து கொலை செய்த கொடூர சம்பவம் விருதுநகர் மாவட்டம் பாப்பாங்குளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

விருதுநகர் மாவட்டம், வீரசோழன் அருகேயுள்ள பாப்பாங்குளத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ். 30 வயதான இவர் கடந்த 16 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்றவர் மாயமானார்.

ஆனந்தராஜ் காணாமல் போனது குறித்து வீரசோழன் காவல் நிலையத்தில் 18 ஆம் தேதி புகாரளிக்கப்பட்டது. இந்த நிலையில் 19ந்தேதி பாப்பாங்குளம் பகுதியில் உள்ள மயானத்தில் தலை தனியாக துண்டிக்கப்பட்டு அழுகிய நிலையில் ஆனந்தராஜின் சடலம் கண்டெடுக்கப்பட்டது

ஆனந்தராஜ் சடலத்தை மீட்டு பிணக்கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்தை பார்வையிட்ட காவல் உயர் அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தினர், ஆனந்தராஜ் மாயமான அன்று அவருடன் ஒன்றாக சுற்றிய A.தரைக்குடியை சேர்ந்த 20 வயது வசந்தபாண்டி , 19 வயது இருளாண்டி, ஒட்டங்குளத்தை சேர்ந்த சிலம்பரசன் ஆகிய மூவரையும் பிடித்து விசாரித்த போது கஞ்சா கூட்டாளிகளின் குரூர குணம் அம்பலமானது.

எந்த ஒரு போதை பழக்கத்துக்கும் அடிமையாகாத ஆனந்தராஜ் , கஞ்சா போதைக்கு அடிமையான வசந்த பாண்டி, இருளாண்டி,சிலம்பரசன்மற்றும் இருள் ஆகியோருடன் கூட்டாளியாக சுற்றி உள்ளான்.

சில தினங்களுக்கு முன்பு கூட்டாளிகளுடன் ஒருவருக்கொருவர் கேலியாக பேசும் போது புற்றுனோயால் உயிரிழந்த ஆனந்தராஜின் தாயை பற்றி இருவர் இழிவாக பேசியதாக கூறப்படுகின்றது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆனந்தராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கூட்டாளிகளை குத்துவதற்கு பாய்ந்துள்ளார். அவதூறாக பேசியவர்களை கடுமையாக எச்சரித்துள்ளார்.

மற்றவர்கள் ஆனந்தராஜை சமாதனப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். தங்கள் முன் கத்தியை எடுத்து சுழற்றிய ஆனந்தராஜை பழிவாங்கும் திட்டத்துடன் சுற்றிய அவனது கூட்டாளிகள் திட்டமிட்டபடி ஆனந்தராஜை கடந்த 16 ந்தேதி பாப்பாங்குளம் சுடுகாட்டு பகுதிக்கு இரவு வேளையில் அழைத்துச்சென்றுள்ளனர்.

அங்கு வைத்து கூட்டாளிகள் 4 பேரும் மது அருந்தி கஞ்சா புகைத்தபடி ஆனந்தராஜை கடுமையாக தாக்கி உள்ளனர். ஒரு கட்டத்தில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய அவரை, கழுத்தை அறுத்து துண்டாக வெட்டிப் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இந்த கொலை தொடர்பாக குரூர கூட்டாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள கமுதி கோட்டைமேடு பகுதியை சேர்ந்த இருள் என்கிற இருளாண்டியை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். கூடா நட்பு கேடாக முடியும் என்பதற்கு இந்த கொடூர கொலை சம்பவம் மற்றும் ஒரு உதாரணம்..!

 


Advertisement
செங்கல்பட்டில் சாதிச் சான்றிதழுக்காக அலைக்கழிக்கப்படுவதால் ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்
சிவகங்கையில் கைது செய்யப்பட்டவரின் காலை உடைத்ததாக புகார் - எஸ்.ஐ பணியிட மாற்றம்
ஈரோட்டில் தடகள வீராங்கனையை பின்தொடர்ந்து சென்று செல்போனை பறித்த 3 பேர் கைது
திருச்சியில் சிறுவன் மீது புல்லட் பைக்கை ஏற்றிய சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன்
திருவாரூரில் தம்பியின் இறுதிச்சடங்கில் அக்காள் உயிரிழப்பு 6 பேர் காயம்
கடலூரில் போலி மருத்துவ சான்றிதழ்கள் வழங்கிய வழக்கில் இந்திய சித்த மருத்துவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கைது
அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் டெக்னீஷியன்களை நியமிக்க உத்தரவு: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு
பாதுகாப்பு கருதி மழைக்கு முன்னதாக பக்கிங்காம் கால்வாயில் கட்டப்பட்ட தடுப்பணை ஷட்டர்கள் உடைப்பு
திருநெல்வேலியில் நீர்நிலையில் கட்டடம் கட்டி நிதியை வீணடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு
அரசுப் பெண்கள் பள்ளி மாணவிகள் வளைகாப்பு ரீல்ஸ்... வகுப்பு ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம்

Advertisement
Posted Sep 23, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரவுடி சீசிங் ராஜா.... சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்..? ஆம்ஸ்ட்ராங் வழக்கில் NO என அறிவிப்பு

Posted Sep 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி


Advertisement