செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மனைவியை கொன்று சடலத்துடன் படுத்து உறங்கிய குடிகார கணவன்.. போதையின் விபரீத பாதை.!

Apr 21, 2022 09:40:58 AM

சிதம்பரம் அருகே குடி போதையில் மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு மனைவியின் சடலத்துடன் படுத்து உறங்கிய கணவனை தண்ணீர் தெளித்து எழுப்பி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.. கண்ணை மறைத்த தந்தையின் குடியால் தாயை இழந்த இரு குழந்தைகளின் பரிதாபம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

சிதம்பரம் அருகே வடக்கு மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் . கட்டிட தொழிலாளியான இவரது மனைவி தீபா . இவர்களுக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகிறது. 8 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

மதுபழக்கத்துக்கு அடிமையான ஆன்ந்த் , தினமும் இரவு குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அதன் பின்னர் சத்தம் அடங்கியதாக கூறப்படுகின்றது.காலை வெகு நேரமாகியும், ஆனந்த் வீடு திறக்காமல் இருப்பதை பார்த்து அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்தனர். ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது, ரத்த காயங்களுடன் தீபா சடலமாக கிடப்பதும், அருகில் ஆனந்த் மூச்சு பேச்சில்லாமல் படுத்து இருப்பதையும் பார்த்து இருவரும் உயிரிழந்து விட்டதாக கருதி போலீசுக்கு தகவல் அளித்தனர்

அண்ணாமலைநகர் போலீசார் விரைந்து வந்து பார்த்த போது போதையின் ஆனந்த் நெளிந்ததால் அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து விசாரித்த போது மனைவி தீபாவை கொலை செய்து விட்டு அவருடன் படுத்து உறங்கியது தெரியவந்தது.

சம்பவத்தன்று போதையில் வீட்டுக்கு வந்த கணவனிடம் எதற்காக குடித்து உடலை கெடுத்து கொள்கிறீர்கள் என்று மனைவி கேட்டதால், ஆத்திரமடைந்த ஆனந்த் உருட்டுக்கட்டையால் மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே மனைவி தீபா ரத்தவெள்ளத்தில் உயிரிழந்துள்ளார். தான் தாக்கியதில் மனைவி இறந்து விட்டார் என்பது கூட தெரியாமல் போதையில் அவரது உடல் அருகிலேயே படுத்து உறங்கி உள்ளான் குடிகார குடும்பஸ்தன் ஆனந்த் என்கின்றனர் காவல்துறையினர்.

தீபாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடி குடியை கெடுக்கும் என்ற எச்சரிக்கை உண்மையான நிலையில் போதையால் நிதானமிழ்ந்த தந்தையால், தாயை இர்ழந்து அவர்களது இரு குழந்தைகளும் தவிக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement