செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கிழங்கு மாவில் தட்டு, குவளை, கரண்டி.. பயன்பாட்டுக்குப் பின் உணவாகும் பொருட்கள்..!

Apr 19, 2022 09:03:53 AM

திருச்சியைச் சேர்ந்த தொழில்முனைவர் ரவிச்சந்திரன் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்கும் வகையில், கிழங்கு மாவில் தட்டு, குவளை, கரண்டி ஆகியவற்றைத் தயாரித்துள்ளார். பயன்பாட்டுக்குப் பின் உணவாவதே அவர் தயாரிப்புகளின் சிறப்பாகும்..

திருச்சியைச் சேர்ந்த தொழில் முனைவர் ரவிச்சந்திரன். பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்கப் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்த இவர், கிழங்கு மாவில் பொருட்களைத் தயாரிக்க நொச்சியத்தில் 40 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் தொழிற்சாலை அமைத்துத் தட்டுகள், குவளைகளைத் தயாரித்து விற்று வருகிறார்.

மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு, கோதுமை, தென்னங்குருத்து, உருளைக்கிழங்கு ஆகியவற்றைக் காயவைத்து மாவாக அரைத்துத் தட்டு, குவளை, கரண்டி ஆகியவற்றைத் தயாரித்து வருகிறார்.

மாவால் தயாரிக்கப்படும் தட்டுகளில் உணவருந்திய பின், தட்டுகளை அப்படியே கடித்துத் தின்னலாம் என்றும், நீரில் போட்டால் கரைந்து மீன்களுக்கு உணவாகும் என்றும், மண்ணில் போட்டால் மட்கி உரமாகும் என்றும் கூறுகிறார் ரவிச்சந்திரன்..

மாவால் தயாரிக்கும் தட்டுகள் குவளைகளைப் பயன்பாட்டுக்குப் பின் ஆடு மாடுகளுக்கு உணவாக அளிக்கலாம் என்றும், கிழங்கு மாவைக் கொண்டே தயாரிப்பதால் இவற்றைக் கோவில்களிலும் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கிறார்.

வேதிப்பொருள் கலக்காமல், நூறு விழுக்காடு இயற்கைப் பொருளால் தயாரித்த குவளைகள் 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுள்ள வெந்நீரையும் தாங்கும் எனத் தெரிவிக்கிறார்.

பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்துச் சூழலைக் காக்கும் இவ்வகைப் பொருட்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதாகக் கூறும் ரவிச்சந்திரன், பெருமளவில் உற்பத்தி செய்ய மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.


Advertisement
கனமழையால் அறுந்து விழுந்த உயர் அழுத்த மின் கம்பியை கைகளால் அகற்ற முயன்ற முதியவருக்கு நேர்ந்த சோகம்
கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்த வெள்ள நீர்.. விளைநிலங்களிலும் நெல், வாழை தோப்புகளில் தேங்கிய தண்ணீர்
கார் மீது மரம் முறிந்து விழுந்து விபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கேரள சுற்றுலா பயணிகள்
சென்னையில் நாளை முதல் படிப்படியாக மழை அதிகரிக்க வாய்ப்பு..!
கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் தயாரித்த 2 பேர் கைது
வரும் 16ஆம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட்..! தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும்..?
இஸ்திரி பெட்டி மூலம் துணிகளை தேய்த்து கொண்டிருந்த மாணவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
புதுக்கோட்டையில் கனமழை - வெள்ளத்தில் சிக்கிய ஆட்டோவில் இருந்த குழந்தை உள்பட குடும்பத்தினர் மீட்பு
புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி - நூற்றுக்கணக்கானோர் கலந்துக் கொண்டு உற்சாக நடனம்
மதுரையில் 3 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து பெய்த கனமழை - ரயில்வே தரைப்பாலத்தில் வெள்ளத்தில் சிக்கிய வாகனங்கள்

Advertisement
Posted Oct 12, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா?.. மனித தவறு விபத்துக்கு காரணமா?.. உயர்மட்டக்குழு தீவிர விசாரணை

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் 90 கி.மீ.வேகத்தில் மோதிய எக்ஸ்பிரஸ் தடம் புரண்டன 6 பெட்டிகள்

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்ணே நவமணியே... ஒரு நாயின் பாசப்போராட்டம் வாய் விட்டு அழுத சோகம்..! மனிதர்களை விஞ்சிய தாய் பாசம்..

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வானத்தில் வட்டமிட்டாலும்144 உயிர்களை பாதுகாத்த பைலட்ஸ் இக்ரான் ரிபாத் - மைத்ரேயி..! விமானத்தில் பெட்ரோலை வீணாக்கியது ஏன் ?

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

சிறு கவனக்குறைவு தீயில் கருகி பலியான வங்கி பெண் அதிகாரி..! அதிர்ந்து குலுங்கியது வீடு..


Advertisement