செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மூதாட்டி கொலை.. மாணவி கைது.. காரணம் காதல்..!

Apr 17, 2022 08:10:51 PM

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் காதலனை திருமணம் செய்துகொள்வதற்காக 72 வயது மூதாட்டியைக் கொன்று 15 சவரன் நகைகளைக் கொள்ளையடித்த 17 வயது பள்ளி மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாரியப்பன் வீதியில் மகன் செந்தில்வேலுடன் வசித்து வந்தவர் 72 வயதான நாகலட்சுமி. சனிக்கிழமை காலை செந்தில் வேல் வழக்கம்போல வேலைக்கு சென்றுள்ளார். 

மூதாட்டி நீண்டநேரம் வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அவர் இறந்து கிடந்தார். அதிர்ச்சியடைந்தவர்கள் உடனடியாக செந்தில்வேலுக்கு தகவல் கொடுத்தனர்.

நாகலட்சுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டு, அவர் அணிந்திருந்த சுமார் 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

தகவலறிந்து வந்த போலீசார், அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்களில் 17 வயது பள்ளி மாணவி, அடையாளம் தெரியாத இளைஞன் ஒருவனை மூதாட்டி வீட்டுப் பக்கம் பார்த்ததாகக் கூறியுள்ளார்.

ஆனால் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, அந்த மாணவிதான் அடிக்கடி மூதாட்டி வீட்டுப் பக்கம் சென்று வந்தது பதிவாகி இருந்தது.

மாணவியின் பேச்சும் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால், போலீசார் தங்களது பாணியில் விசாரணையை முன்னெடுத்தனர். அதில் கொலையைச் செய்தது தாம் தான் என மாணவி ஒப்புக்கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மாணவி இளைஞன் ஒருவனை காதலித்து வருகிறார். இருவரும் திருமணம் செய்துகொள்வதற்கான செலவீனங்கள் குறித்து யோசித்தபோது, நாகலட்சுமி அணிந்திருந்த நகைகள் மாணவியின் கண்களில் பட்டுள்ளன. இதனையடுத்து செந்தில்வேல் வேலைக்குச் சென்றதும் அவரைக் கொன்று நகைகளைக் கொள்ளையடித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

மாணவியைக் கைது செய்த மேற்கு காவல் நிலைய போலீசார், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement
முழுநேர அரசியல்வாதி என இங்கு யாரும் இல்லை - கமல்ஹாசன்
போலியாக பட்டா உருவாக்கி அரசு நிலம் ஆக்கிரமிப்பு.. அ.தி.மு.க பிரமுகர், அவரது மனைவி மீது வழக்குப்பதிவு
தடுப்பணை பலமாக இல்லையென்றால் கட்டியவர்கள் சிறைக்கு செல்வார்கள் - துரைமுருகன்
துப்பாக்கி முனையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் கடத்தல் - துரத்திப்பிடித்த எஸ்.ஐ.
இனி காவிரி நீரை மட்டுமே நம்ப வேண்டியதில்லை.. பண்ணைக் குட்டைகள் மூலம் குறுவை சாகுபடி செய்த முன்னாள் அமைச்சர்
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு - வானதி வலியுறுத்தல்
மது ஒழிப்பு கொள்கையை தி.மு.க.வினர் நாடகமாக்கிக்கொண்டிருக்கின்றனர் - தமிழிசை சவுந்தரரராஜன்
பண்ணைக் குட்டைகள் மூலம் குறுவை சாகுபடி செய்த முன்னாள் அமைச்சர்
கோயில்களுக்கு ஆவினிடம் இருந்தே நெய் வாங்கப்படுகிறது: சேகர் பாபு
பழனி கோவில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்புவதாக புகார்... பா.ஜ.க. நிர்வாகிகள் இருவர் மீது அறநிலையத்துறை சார்பில் போலீஸில் புகார்

Advertisement
Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 21, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி


Advertisement