திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்தும், சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
4நாட்கள் தொடர் விடுமுறையால் தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகை தந்து கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது நீதிமன்ற உத்தரவுபடி பொது தரிசனம் மற்றும் 100 ரூபாய் விரைவு தரிசனத்தில் மட்டும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் கோவில் பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்கள் பக்தர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு விரைவாக தரிசனம் செய்வதற்கு குறுக்கு வழியில் அனுமதிப்பதால் நேர்வழியில் வரும் பக்தர்கள் கூடுதலாக பல மணி நேரம் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.