செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

காதல் வலையில் வீழ்ந்த +2 மாணவி..! பாலியல் வன்கொடுமை செய்து பணம் பறிப்பு.. ட்ரம்ஸ் இசைக் கலைஞருக்கு சிறை..!

Apr 16, 2022 06:13:07 PM

சென்னையில், பிளஸ் 2 மாணவியை காதலிப்பதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததோடு, தனிமையில் இருந்த வீடியோக்களை காட்டி மிரட்டி, 7 லட்சம் ரூபாய் வரை பணம் பறித்த ட்ரம்ஸ் இசைக் கலைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான்..

பிளஸ் 2 மாணவியான தங்களது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, பல லட்சம் ரூபாய் கேட்டு இளைஞர் ஒருவர் மிரட்டுவதாக மாணவியின் பெற்றோர் அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அதன் அடிப்படையில் கோடம்பாக்கத்தை சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவனை பிடித்து விசாரித்ததில், பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்தது.

இசைக் கச்சேரிகளில் டிரம்ஸ் வாசித்து வரும் ஞான பிரகாசம், மாணவி 8ஆம் வகுப்பு படிக்கும் போது அவருக்கு அறிமுகமானதாகவும், நாளடைவில் மாணவியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தைக் கூறி பலமுறை மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதனை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், தேவைப்படும் போதெல்லாம் மாணவியிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டதோடு, ஒரு கட்டத்தில் லட்சக் கணக்கில் பணம் தேவைப்பட்டதால், தனிமையில் இருந்த வீடியோக்களை மாணவியிடம் காட்டி மிரட்டி பணம் வாங்கி, ஞானப்பிரகாசம் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் விசாரணயில் தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு முறை மிரட்டும் போதும் மாணவி பயந்துபோய் பெற்றோருக்கு தெரியாமல் பணம் எடுத்து வந்து கொடுத்த நிலையில், அதிக தொகை காணாமல் போனதால் இந்த விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து ஞானப்பிரகாசத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

 


Advertisement
கனமழையால் அறுந்து விழுந்த உயர் அழுத்த மின் கம்பியை கைகளால் அகற்ற முயன்ற முதியவருக்கு நேர்ந்த சோகம்
கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்த வெள்ள நீர்.. விளைநிலங்களிலும் நெல், வாழை தோப்புகளில் தேங்கிய தண்ணீர்
கார் மீது மரம் முறிந்து விழுந்து விபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கேரள சுற்றுலா பயணிகள்
சென்னையில் நாளை முதல் படிப்படியாக மழை அதிகரிக்க வாய்ப்பு..!
கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் தயாரித்த 2 பேர் கைது
வரும் 16ஆம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட்..! தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும்..?
இஸ்திரி பெட்டி மூலம் துணிகளை தேய்த்து கொண்டிருந்த மாணவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
புதுக்கோட்டையில் கனமழை - வெள்ளத்தில் சிக்கிய ஆட்டோவில் இருந்த குழந்தை உள்பட குடும்பத்தினர் மீட்பு
புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி - நூற்றுக்கணக்கானோர் கலந்துக் கொண்டு உற்சாக நடனம்
மதுரையில் 3 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து பெய்த கனமழை - ரயில்வே தரைப்பாலத்தில் வெள்ளத்தில் சிக்கிய வாகனங்கள்

Advertisement
Posted Oct 12, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா?.. மனித தவறு விபத்துக்கு காரணமா?.. உயர்மட்டக்குழு தீவிர விசாரணை

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் 90 கி.மீ.வேகத்தில் மோதிய எக்ஸ்பிரஸ் தடம் புரண்டன 6 பெட்டிகள்

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்ணே நவமணியே... ஒரு நாயின் பாசப்போராட்டம் வாய் விட்டு அழுத சோகம்..! மனிதர்களை விஞ்சிய தாய் பாசம்..

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வானத்தில் வட்டமிட்டாலும்144 உயிர்களை பாதுகாத்த பைலட்ஸ் இக்ரான் ரிபாத் - மைத்ரேயி..! விமானத்தில் பெட்ரோலை வீணாக்கியது ஏன் ?

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

சிறு கவனக்குறைவு தீயில் கருகி பலியான வங்கி பெண் அதிகாரி..! அதிர்ந்து குலுங்கியது வீடு..


Advertisement