திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தனியார் நூற்பாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் பஞ்சு பேரல்கள் தீயில் எரிந்து நாசமாயின.
வெல்லனம்பட்டியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில் இந்துஜா என்ற தனியார் நூற்பாலை செயல்பட்டு வருகின்றது. நேற்றிரவு இந்த நூற்பாலையின் உள்ளே திடீரென தீ பற்றி மளமளவென அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. இதனால் அங்கிருந்த பஞ்சு பேரல்கள் தீப்பற்றி கொளுந்து விட்டு எரிந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீர ர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த நூற்பாலையில் தொடர்ந்து 3-வது முறையாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.