செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

செந்தில் ஆண்டவன் சன்னதிக்கு குறுக்கு சந்தில் செல்ல ரூ 2000 வசூலிக்கும் கும்பல்..!

Apr 16, 2022 07:28:16 AM

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விஐபி தரிசனத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் , இடைத்தரகர்கள் மூலம் தலைக்கு 2000 ரூபாய் கையூட்டு பெற்றுக் கொண்டு அதிகாரிகள் வி.ஐ.பி. தரிசனத்திற்கு அனுமதி அளிப்பதாக குற்றஞ்சாட்டி திமுக பிரமுகர் ஒருவர் கோவிலில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது... 

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தரிசனத்திற்கு வெளியூர் மற்றும் வெளி நாடுகளில் இருந்து நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வருவார்கள்.

இந்த கோயிலில் செந்தில் ஆண்டவரை தரிசிக்க 250 ரூபாய் சிறப்பு தரிசனமும் 100 ரூபாய் மற்றும் 20 ரூபாய் கட்டணம் தரிசனமும் பொது தரிசனமும் நடைமுறையில் இருந்து வந்தது.

கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடவுள் மட்டுமே விஐபி எனக்கூறி ரு 250 விஐபி தரிசனம் மற்றும் 20 ரூபாய் சிறப்பு தரிசனத்தை ரத்து செய்து உத்தரவிட்டு இருந்தது.

அதுமட்டுமில்லாமல் தினமும் ஆயுதப்படை காவலர்களை சுழற்சிமுறையில் பணியில் அமர்த்த உத்தரவிட்டிருந்தது. இதனை அடுத்து 100 ரூபாய் கட்டண தரிசனமும் மற்றும் பொது தரிசனமும் மட்டுமே நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் தமிழ் புத்தாண்டு மற்றும் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் ஏராளமானோர் தரிசனத்திற்கு வந்திருந்தனர். உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை மீறி கோவில் அதிகாரிகள் பக்தர்களிடம் ஆளுக்கு 2000 ரூபாய் வரை பணத்தை கையூட்டாக பெற்றுக்கொண்டு சண்முகவிலாஸ் மண்டபம் பகுதி வழியாக வசதி படைத்த பக்தர்களை விஐபி போல தரிசனத்திற்கு அனுப்பி வைத்ததால் சல சலப்பு ஏற்பட்டது

நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்ய குடும்பத்துடன் சென்னையில் இருந்து வந்திருந்த திமுக பிரமுகர் ஒருவர், பணம் பெற்றுக் கொண்டு சிலரை மட்டும் உள்ளே விடுவது ஏன் ? எனக்கேட்டு பாதுகாப்பு பணியில் இருக்கக்கூடிய தனியார் காவலாளிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் .

நீதிமன்ற உத்தரவை அமல் படுத்த வேண்டிய காவலல் துறையினரும் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி இருந்ததால் பக்தர்கள் வேதனை தெரிவிக்கும் நிலை உண்டானது.

சம்பவத்தை செய்தியாளர்கள் படம் பிடிக்கும் தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் , சண்முக விலாச மண்டபத்தில் கூடியிருந்த வசதி படைத்த பக்தர்களை விரட்டினர்.

காவலர்கள் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். பக்தர்களின் கூட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபட்ட அற நிலையத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement