சென்னை ஈ.சி.ஆர் கடற்கரை பகுதியில் பெண் ஒருவரிடம் கடுமையாக நடந்து கொண்ட காவலர் மீது, துறை ரீதியிலான விசாரணை நடத்த டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
வட கிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த மதுமிதா பைடா என்பவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், தனது நண்பருடன் ஈ.சி.ஆர் சீ ஷெல் அவென்யூ பகுதியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த ரோந்துப் பணி காவலர் அநாகரீகமாகப் பேசி கடுமையாக நடந்துகொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட நேரம் தான் கடற்கரையில் அமர வேண்டும் என கால நேரம் வரையறுக்கப்படாத போது இவ்வாறு நடந்துகொள்வது முறையல்ல எனவும் பதிவிட்டுள்ளார்.
காவலரின் கடுமையான மற்றும் பொறுப்பற்ற நடத்தைக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும், அவர் மீது துறை ரீதியிலான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் டி.ஜி.பி சைலேந்திர பாபு கூறியுள்ளார்.