செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

தட்டி கேட்க எவருமில்லை பனை மரங்களை அழிக்கும் மணல் கொள்ளையர்கள்..! தேரியை கபளீகரம் செய்வதாக குற்றச்சாட்டு

Apr 10, 2022 09:42:36 AM

திருச்செந்தூர் அருகே பல ஏக்கர் பரப்பிலுள்ள செம்மண் தேரியில் அரசு அனுமதியின்றி ஏராளமான பனைமரங்களை அழித்து மணல் கொள்ளை நடைபெற்று வருவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் செம்மண் தேரி மணல் குன்றுகள் அமைந்துள்ளன. தமிழகத்தில் எங்கும் அமைந்திடாத இந்த தேரி மணல் பகுதிகளை பாதுகாத்திட அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில் திருச்செந்தூர் அருகே பரமன்குறிச்சியில் அமைந்துள்ள முத்தையா தேரி பகுதியில் கடந்த சில நாட்களாக மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது.

ஹாலோ பிளாக் கற்கள் தயாரிப்பதாகக் கூறி அந்த இடத்தை சுற்றி அடைத்து வைத்துள்ள பரமன்குறிச்சி கஸ்பாவைச் சேர்ந்த சரவணன் என்பவர், அது தனக்கு சொந்தமான இடம் என்று கூறி அரசு அனுமதி இன்றி, சுமார் 30 அடிக்கு ஆழத்துக்கு பள்ளம் தோண்டி நாளொன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் மணலை அள்ளி அனுப்பி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

தினமும் பொக்லைன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றி அனுப்பப்படும் மணலானது, சுமார் 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இங்கு நிலத்தடி நீருக்கு ஆதாரமாக விளங்கக் கூடிய ஏராளமான பனை மரங்களும் வேறொடு சாய்க்கப்படுவதால் , பரமன்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளான கீழநாலுமூலைக்கிணறு, குன்றுமலை சாஸ்தா கோவில் தேரி, முத்தையா தேரி உள்ளிட்ட சுமார் 35 கிராமங்களில் சுற்றுச் சூழல் பாதிக்கப் படுவதோடு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலையும் உருவாகி இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வீடுகட்டவோ, செங்கல் செய்யவோ பயன்படுத்த இயலாத இந்த தேரி மண்ணை லாரி லாரியாக அள்ளிச்சென்று இதில் உள்ள தோரியம் உள்ளிட்ட பல்வேறு கனிமங்களை பிரித்தெடுக்கிறார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் பனை மரங்களை வெட்டுவதற்கு தடை பிறப்பித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. மாவட்ட ஆட்சித்தலைவரின் அனுமதி இன்றி இந்தப் பகுதியில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ஆதங்கம் தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள், கையூட்டு பெற்றுக் கொள்ளும் சில அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இந்த தொடர் மணல் கொள்ளை நடைபெற்று வருவதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்த மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி தேரியில் உள்ள பனை மரங்களை பாதுகாத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்தப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Advertisement
வடபழனி 100 அடி சாலையில் ஆறுபோல் ஓடிய மழைநீர்....மெதுவாக ஓட்டிச் சென்ற  வாகன ஓட்டிகள்
பேச்சிபாறை அணையிலிருந்து உபரி நீர்வெளியேற்றத்தால் திற்பரப்பு அருவி , பரளி ஆற்றில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத்  தடை..
புளியந்தோப்பில் முதலமைச்சர் ஆய்வு
மின் ஒயர் அறுந்து கீழே கிடப்பதை அறியாமல் மிதித்ததால் விபத்து.. சம்பவ இடத்திலேயே வாலிபர் பலி
மழைநீர் வடிகால் கால்வாய் இணைப்பு பகுதிகள் முழுமையாக25 இடங்களில் சீரமைப்பு- சென்னை மாநகராட்சி அறிவிப்பு
பட்ட பகலில் பெண்ணின் கழுத்தில் இருந்து 5 சவரன் தங்க செயின் பறிப்பு..
மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நள்ளிரவில் பள்ளிக்கரணையில் அதிகாரிகளுடன் துணை முதல் அமைச்சர் ஆய்வு
நாகை - இலங்கை இடையே இயக்கப்படும் பயணிகள் கப்பல் சேவை இன்றும் மற்றும் அக்.17ஆம் தேதியும் தற்காலிக ரத்து - கப்பல் நிறுவனம்..
மழைக்காலத்தில் வாகனங்களை மேம் பாலத்தில் நிறுத்துவதற்கு அபராதம் இல்லை...
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை..

Advertisement
Posted Oct 14, 2024 in தமிழ்நாடு,Big Stories,

தமிழகத்தை உலுக்கிய 13 ஏகாதசி கொலைகள்..! வேட்டையனாய் துப்பறிந்த டி.எஸ்பி..! ஒரு நிஜ கிரைம் திரில்லர்

Posted Oct 12, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா?.. மனித தவறு விபத்துக்கு காரணமா?.. உயர்மட்டக்குழு தீவிர விசாரணை

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் 90 கி.மீ.வேகத்தில் மோதிய எக்ஸ்பிரஸ் தடம் புரண்டன 6 பெட்டிகள்

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்ணே நவமணியே... ஒரு நாயின் பாசப்போராட்டம் வாய் விட்டு அழுத சோகம்..! மனிதர்களை விஞ்சிய தாய் பாசம்..

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வானத்தில் வட்டமிட்டாலும்144 உயிர்களை பாதுகாத்த பைலட்ஸ் இக்ரான் ரிபாத் - மைத்ரேயி..! விமானத்தில் பெட்ரோலை வீணாக்கியது ஏன் ?


Advertisement