செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கோயம்பேடு மார்கெட்டுக்கே பைனான்ஸாம்.. கோடிகளை சுருட்டிய அரசியல் கேடி.!

Apr 06, 2022 07:44:29 AM

சென்னை கோயம்பேட்டில் மொத்த வியாபாரிகளுக்கு மீட்டர் வட்டியில் பணம் கொடுப்பதாக கூறி சவுதி அரேபியா தொழில் அதிபரிடம் 12 அரை கோடி ரூபாயை சுருட்டிய கேடி அரசியல் பிரமுகரின் மனைவியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை சைதாப்பேட்டையில் கார் ஓட்டுனரை வீட்டுக்குள் பூட்டிவைத்து தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் பிரமுகரும் ரவுடியுமான ஓ.வி.ஆர் ரஞ்சித்தின் மனைவியான சுனிதா என்பவர் தான் கோடிகளை சுருட்டிய புகாரின் கைது செய்யப்பட்டுள்ளவர்

சைதாப்பேட்டையில் தாங்கள் தங்கி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பிளாட்டை கவர்ச்சிகரமான அலுவலகமாக மாற்றி வைத்திருந்த ஓ.வி.ஆர் ரஞ்சித் , இரு போலியான நிதி நிறுவனங்கள் நடத்திவந்துள்ளார்.

மனைவி சுனிதாவை மேலாண் இயக்குனராக போட்டு இயங்கி வந்த அந்த நிதி நிறுவனத்தில் உள்ளூர் மற்றும் வெளி நாடுகளை சேர்ந்த தொழில் அதிபர்களை தனது அரசியல் தொடர்புகள் மூலம் சந்தித்து முதலீடுகளை ஈர்த்துள்ளார்.

அதன்படி சவுதிஅரேபியாவில் தொழில் செய்து வரும், சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த தொழில் அதிபர் சீனிவாசன் என்பவரிடம், தான் கோயம்பேட்டில் பல கோடிகளை மீட்டர் வட்டிக்கு விட்டு ஒரே நாளில் இரு மடங்காக வசூலிப்பதாகவும், மொத்த காய்கறிவியாபரிகளுக்கு பணத்தை அள்ளிக்கொடுப்பதால் தன்னை நம்பிதான் கோயம்பேடு மார்க்கெட்டே இயங்குவதாகவும் கதை அளந்துள்ளார்.

ஒரு லட்சம் ரூபாய் காலையில் கொடுத்தால் ஜெட் வட்டியின் மூலம் மதியவேளையில் தன்னிடம் 2 லட்சம் ரூபாய் கைக்கு வந்து விடும் என்று கூறி உள்ளார். இதனை நம்பி சீனிவாசன் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை 12 கோடியே 50 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தையும், 36 சவரன் நகைகளையும் முதலீடு செய்துள்ளார்.

அவர் முதலீடு செய்த பணம் வட்டியாக குட்டிபோடுவதாக கூறிவந்த இந்த மோசடி கும்பல், பணத்தை முதலீடு செய்து ஒரு வருடம் கடந்த நிலையிலும் சீனிவாசனுக்கு எந்த ஒரு பணத்தையும் கொடுக்காமல் டிமிக்கு கொடுத்து இழுத்தடித்து வந்துள்ளனர்.

சீனிவாசன் போன்ற முதலீட்டாளர்களிடம் பெற்ற பணத்தை, ஓ.வி.ஆர் ரஞ்சித் பல பெண்களுடன் ஊர் ஊராக சுற்றவும், உல்லாச வாழ்க்கைக்கும் செலவிட்டுள்ளார். இந்த நிலையில் பணத்தை திருப்பிக்கேட்டு சீனிவாசன் காவல்துறையினர் மூலம் நெருக்கடி கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் தனது கணவரின் அந்தபுர அத்துமீறல்கள் அம்பலமானதால் கணவனுடன் சண்டையிட்டு தலைமறைவாகி உள்ளார் சுனிதா.

இதற்கிடையே தனது காதல் ரகசியத்தை ஓட்டுனர் மனைவியிடம் சொன்னதாக நினைத்து அவரை கொலை வெறியுடன் தாக்கிய வழக்கில் ஓ.வி.ஆர் ரஞ்சித்தை கிண்டி போலீசார் கைது செய்து அழைத்துச்சென்ற நிலையில், 12 கோடியே 50 லட்சம் ரூபாயை மோசடியாக சுருட்டிய புகாரில் சுனிதாவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த மோசடி சம்பவத்தில் ஓ.வி.ஆர் ரஞ்சித்துக்கு முக்கிய தொடர்பு இருப்பதால் அவரை இந்த வழக்கிலும் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.


Advertisement
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement