சேலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லாமல் பேருந்து நிலையத்தில் சுற்றித் திரிந்த மாணவ, மாணவிகளுக்கு அம்மாவட்ட காவல்துறை துணை ஆணையர் மாடசாமி அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் போலீசார் இன்று கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள் குறித்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது அங்கு வெகு நேரமாக சீருடை அணிந்த படி மாணவ, மாணவிகள் நின்றிருந்ததைக் கண்ட துணை ஆணையர் மாடசாமி, பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு அவர்களை அழைத்துச் சென்று அறிவுரை வழங்கினார்.
பின்னர், அந்த மையத்தின் அதிகாரிகள் மூலம் மாணவ, மாணவிகளை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.